Friday 30 March 2018

Mainstream makes DC lawmaker apologize for being “anti-Semitic” for stating Rothschilds control weather

Source: https://www.healthnutnews.com/mainstream-makes-dc-lawmaker-apologize-for-being-anti-semitic-for-stating-rothschilds-control-weather/



Download link:  https://www.facebook.com/HealthNutNews/videos/2122049664476876/

Beauty Tips / Skin Care Home Remedy / தோல் மினுமினுக்க / Anitha Kuppusamy

https://www.youtube.com/watch?v=brP2y5kVx4I

Tuesday 27 December 2016

தமிழ்க்கடவுளான முருகன் பற்றி, புராணங்களில் காணப்படும் திடுக்கிடும் தகவல்கள்!- ஊரறியா அரிய தகவல்

தமிழ்க்கடவுளான முருகன் பற்றி, புராணங்களில் காணப்படும் திடுக்கிடும் தகவல்கள்!- ஊரறியா அரிய தகவல்
கடந்த பல ஆண்டுகளாக இந்து சமயத்தைப் பற்றி அறிந்து கொள்ள ஸமிஸ்கிருத மொழியில்
எழுதப்பட்ட புராணங்களே முக்கிய குறிப்பேடுகளாக கருதப்பட்டு வருவ தின் காரணம் பல்வேறு செய்திகளைக் கொண்ட கதைகள் அதில்தான் எழுதப்பட்டு உள்ளன. அதில் திருமால், சிவன், மற்றும் மற்றவர்களைப் பற்றி பல்வேறு கதைகள் நிறையவே உண்டு. இதிகாசங்களையும், புராண ங்களையும் சேர்ந்து படித்தால் மட்டுமே வேதங்களை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.
திருமாலுடைய திருவிக்கிரம வரலாறு பற்றிய கதையை போலவே சில புராணக் கதைகள் வேதத்தில் உண்டு என்றாலும் பல்வேறு புராணக் கதைகளும் தனித் தன்மையுடனே விளங்குகின்றன. முருகனைப் பற்றிய கதைகள் புராணங்களில் எழுதப்பட்டு உள்ளன என்றாலும் அந்த புராணக் கதைகளுக்கு அடிப்படை செய்திகள் வேதங்களிலும் உண்டு. ஸ்கந்த பற்றிய புராணக் கதைகளும், அவை எப்படி நாளடைவில் வளர்ந்துள்ளன என்பதைப் பற்றியும் இனி பார்ப்போம்.
ஸ்கந்தரின் தோற்றம்: பொதுக் கருத்து
சிவபெருமானின் புதல்வரே ஸ்கந்த என்று புராணங்களில் கூறப்பட்டு உள்ளது. அவரை பற்றிய வரலாறு அனேகமாக அனைத்து புராணக் கதை களிலும் ஒரே மாதிரியாகத்தான் காணப்படுகின்றது. அரக்கன் தாரகாவி னால் துன்புறுத்தப்பட்ட தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிடு மாறு தமது சார்ப்பில் அக்னிதேவரை அனுப்பினார்கள். சிவபெருமானும் பார்வதியும் தாம்பத்திய உறவில்இருந்த சமயத்தில் அவர்செல்ல, அதனா ல் சிவபெருமானின் உறவு தடைபட, அவருடைய விந்து கீழே விழுந்தது. கோபமுற்ற சிவபெருமான் அதை எடுத்து விழுங்குமாறு அக்னி தேவனுக் குக் கட்டளை இட்டார்.
சிவபெருமானின் கட்டளையின்படி அக்னி தேவன் அதை எடுத்து விழுங்க முயன்றார். ஆனால் அவரால் தன் உடலுக்குள் அதை வைத்து இருக்க முடியாமல் போனதினால், கங்கை நதியில் சென்று அதைத் துப்பி விட்டா ர். அதனால் கங்கையும் கர்பமுற்று ஒரு குழந்தயைப் பெற்று எடுத்தப் பின் அக்குழந்தயை தன்கரை ஓரத்தில் ஒதுக்கினாள். அதைக்கண்ட கிருத்தி கை நட்சத்திரம் ஒரு மனித உரு எடுத்து வந்து அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வரலானாள். அதனால்தான் முருகனுக்கு கார்திகேயா என்ற பெயர் அமைந்ததாக கூறுகின்றனர்.
இதைப்பற்றி பல்வேறு புராணங்களிலும் முரண்பாடுகள் உள்ளன எனவும் , மார்கண்டேய புராணம், நாரதப் புராணம், மற்றும் குமாரப் புராணம் இவைகளில் ஸ்கந்த பிறந்த வரலாறு பற்றி கூறப்படவில்லை எனவும் தெரிகின்றது.
ஸ்கந்த தோற்றம்: பல்வேறு புராணக் கதைகள்:
விஷ்ணு புராணங்களும், வாயு புராணங்களும் காட்டுப் புதர்களில் அக்னிக்குப் பிறந்தவர் ஸ்கந்த என்ற செய்தி சிறிய அளவில் கூறப்பட்டு உள்ளது. மத்சய புராணத்தில் தேவர்கள் தாரகா என்ற அசுரனினால் துன் புறுத்தப்பட்டதை பற்றியும், சிவன்-பார்வதியின் திருமணம், ஸ்கந்த பிறப் பு என அனைத்தையும் விரிவாகக் கூறி உள்ளன. மத்சய புராணக் கதையி ன்படி சிவபெருமானின் உயிரணுவை பார்வதியே முதலில் பெற்று அதை வெளித்தள்ள, அது அக்கினி மூலம் மற்ற அனைத்து கடவுட்களின் வயிற்றி லும் செல்ல, அதை அவர்களாலும் தங்களுக்குள் வைத்து இருக்க முடியா மல் வெளியேற்ற, ஒரு நீர்த் தேக்கமாக அது மாறியது. அந்த நீர்த் தேக்கத் தில் இருந்த நீரையே ஆறு கிருத்திகைகளும் குடித்தபின் பார்வதிக்கும் தர, அதைக்குடித்த பார்வதியும் கர்பமடைந்தாள் என்றும் அதன் மூலமே ஆறு தலைகளையும், சக்தி என்ற ஆயுதத்தினையும் ஏந்தியவாறு அகில உலகினையும் பிரதிபலிக்கும் ஒரு அற்புதக் குழந்தையாக பார்வதியின் வலதுபுறத்தில் இருந்து ஸ்கந்த வெளி வந்தார் என்றும் கூறுகின்றது.
அசுரர்களில், முக்கியமாக மாரா என்பவனைக் கொல்லவே ஸ்கந்த பிறந் ததினால் குமரன் என்று அவர் கூறப்பட்டாலும் ஆறு கிருத்திகை தேவிக ளும் ஒன்றாக இணைந்து அவரைப் பெற்றதினால் கார்திகேயா என்றும் விசாகா எனவும் அழைக்கப்பட்டார். இந்திரனே கார்திகேயா மற்றும் விசா காவை ஒன்றாக்கி அவருக்கு குஹதேவன் என பெயரிட, குழந்தை பிறந்த ஆறாவது நாளில் பிரும்மா. விஷ்ணு, இந்திரன் தலைமையில் இதர தெய் வங்களும் அதை ஏற்றுக் கொண்டனர். அந்த நல்ல நாளில் இந்திரன் தன் மகளான தேவசேனாவை அவருக்கு மனைவியாக திருமணம்செய்து கொ டுத்தார். எந்த ரூபத்தினையும் எடுக்கக்கூடிய குக்கட்டா என்ற விளையா ட்டு பொம்மயை த்வாத்சா என்ற முனிவர் கொடுக்க, விஷ்ணுவும் பல்வே று ஆயுதங்களை தந்தார். அக்னிபகவான் ஒளிமயமான தேஜஸ்ஸைக் கொடுக்க, வாயு பகவான் வாகனம் ஒன்றினைத் தந்தார். அனைத்து கடவு ளும் அவரைப் புகழ்ந்து போற்ற, முருகனும் தாரகாவை வதம் செய்தார். அக்னி தேவனே சிவபெருமானின் உயிர் அணுக்களை கங்கையில் போட, அதை நாணற் புதர்களில் அவள் தள்ள, அது குஹா என்ற குழந்தை யாகப் பிறந்து அசுரன் தாரகாவைக் கொன்றது.
கருடபுராணக் கதையில் அக்கினித் தேவனின் மகனாக நாணற் புதர்களில் ஸ்கந்த பிறந்தது, மற்றும் தக்ஷன் செய்த செயல்களை எல்லாம் விவரித் துவிட்டு சாகா, விசாகா மற்றும் நைகமேயா என்பவர்களும் அக்கினிக்கு ப் பிறந்தவர்களே எனவும், குமரன் கிருத்திகைகள் முலம் பிறந்ததினால் கார்த்திகேயா என்ற பெயர் பெற்றதாகவும் எழுதப்பட்டு உள்ளது. பாகவத ப் புராணத்திலும் ஸ்கந்த அக்னி மற்றும் கிருத்திகைகளுக்குப் பிறந்தார் எனவும், நிஷாகாவின் தந்தையே அக்னி எனவும் கூறப்பட்டு உள்ளது.
ஸ்கந்த புராணக்கதைகளின்மூலம் நாணல்புதரில் இருந்துபிறந்த ஸ்கந்த எப்படி படிப்படியாக முழு உருவம் பெற்றார் என்ற விவரம் கிடைக்கின்ற து. சித்திரை மாத வளர்பிறையில் முதல்நாள் அன்று பிறந்த முருகனுடை ய பல பாகங்கள் இரண்டாம் நாளில் வளர்ந்து, மூன்றாம் நாள் அவை ஒரு உருவைப்பெற்றன. நான்காம் நாளன்று அவை அனைத்தும் ஒன்று சேர்ந் து பன்னிரண்டு கண்கள், ஆறு தலைகள், ஆறு கைகள், ஆறு கால்களுடன் முழு உருவம் பெற்றிட, ஐந்தாவது நாளன்று அனைத்து கட வுளும் ஒன்று சேர்ந்து அவரை அழகு படுத்தினர். ஆறாவது நாள் எழுந்து நின்ற முருகனு க்கு அனைத்து சமஸ்காரங்களையும் பிரும்மா செய்து முடித்தார்.
ஆனால் சிவ புராணக் கதை அவை அனைத்தையும் விஸ்வாமித்திர முனி வரே செய்ததாகவும், சிவபெருமான் சக்தி என்ற ஆயுதத்தையும், கௌரி, வாகனமாக மயில், அக்னி பகவான் ஆடு போன்றவற்றைத் தந்ததாகவும் கூறுகின்றது. மேலும் மத்சய புராணத்துடன் முரண்பட்டு முருகனுக்கு சேவலைத் தந்தது கடல் தேவனே என அது மேலும் கூறுகின்றது. பிரு ம்மானந்த புராணத்தில் மற்றவர்கள் அவரவருக்குக் கொடுத்த பரிசுகள் பற்றியும் கூறப்பட்டு உள்ளது. விஷ்ணு மயில் மற்றும் சேவல், வாயு பக வான் கொடி, ஸரஸ்வதி இசைக் கருவி, பிரும்மா ஆடு மற்றும் சிவபெரு மான் ஒரு செம்மறி ஆட்டையும் தந்தார்கள் என்று தெரிவிக்கின்றது. மே லும் சிவபுராணத்தில், நாணற் புதரில் விழுந்த விந்து ஒரு குழுந்தையாக மாறி, மார்சிக மாதத்தின் (டிஸம்பர் மாதம்) வளர் பிறையின் ஆறாவது நாளன்று பிறந்தது என்றும், சிவன்-பார்வதி திருமணம், ஸ்கந்த பிறப்பு, தாரகா வதம் போன்றவற்றை பற்றியும் விவரமாகக் கூறி உள்ளது.
பத்மபுராணத்தில் அவர் பிறப்புபற்றி வேறுவிதமாகக் கூறப்பட்டு உள்ளது. சிவனும் பார்வதியும் இணைந்து இருந்த பொழுது அக்னி பகவான் அங்கு கிளி உருவில் வர, அவர்களுடைய உறவு தடைப்பட்டது. அதனால் வெளி யில் சிந்திய தன் விந்துவை எடுத்து விழுங்குமாறு அக்னி பகவானிடம் சிவபெருமான் கூறினாராம். ஆனால் அதில் இருந்து சில துளிகள் புமியில் விழ, அங்கு ஒரு நீர்த் தேக்கம் ஏற்பட்டது. அதை அறியாத பார்வதி அதில் சென்று குளிக்க, அப்பொழுது அந்த 6 கிருத்திகைகளையும் அங்கு அவள் கண்டாள். அவர்கள் தாமரை இலையில் தந்த தண்ணீரையும் பருகினாள்.
சிவனின் விந்து கலந்துஇருந்த அந்த தண்ணீரைப்பருகியதால் கர்பமுற்று ஒரு ஆண் குழந்தையை பெற்றுஎடுத்தாள். அவளுடைய வலதுபக்கத்தை க் கிழித்தபடி வெளிவந்தார் குமரன். இடப்புறத்தைக் கிழித்துக் கொண்டு விஷாகா வெளி வந்தாள். இரண்டு குழந்தைகளும் தேய்பிறையின் 15 வது நாள் பிறந்த பின், சித்திரை மாதம் வளர் பிறையின் ஐந்தாவது நாள் ஒன் றாக இணைந்தார்கள். ஆறாம்நாள் அந்த குழந்தைக்கு குஹா எனப்பெயர் இட்டு தேவர்கள் படைத் தலைவனாக நியமிக்கப்பட்டார். வஸ்த முனிவர் அதற்கு ஒருவிளையாட்டு பொம்மைபோல ஒருசேவலை தந்தா ர்.
பிரும்ம புராணமும் கார்த்திகேயன் பிறப்பு வரை பற்றிய செய்தியை பத்ம புராணத்தில் கூறப்பட்டு உள்ளது போலவே கூறினாலும், மேற் கொண்டு ம் கௌதமி நதியின் பெருமைப் பற்றியும் அதைச் சுற்றி உள்ள இடங்களை ப் பற்றியும் விவரிக்கின்றது. வாயு புராணக் கதையின்படி சிவனும் பார் வதியும் இணைந்து இருந்த பொழுது அதைக் கலைக்க இந்திரனே அக்னி யை அனுப்பியதாகவும், அதனால் பார்வதி வெகுண்டெழுந்து, அக்னியா ல் தன் உறவு தடைப்பட்டதினால் அவரே தன்னுடைய கருவை சுமக்க வேண்டும் என சாபமிட்டாராம். அதன்படியே அவளுடைய கருவை அக்னி சுமக்க வேண்டி வந்தது. ஆனால் அவரால் அது முடியாமல் போக அதை கங்கையிடம் கொடுத்தாராம். மேலும் அசுரர்களை அழிக்க அவதாரம் எடுத்ததினால் ஸ்கந்தன் என்ற பெயரை ஸ்கந்த பெற்றதாகவும் கூறுகின் றது.
வாமன புராணத்திலோ ஸ்கந்த பிறப்பு பற்றிய செய்தி வேறு விதமாகக் கூறப்பட்டு உள்ளது. குருன்சா என்ற அரக்கனின் வதம் பற்றிய கேள்விக்கு பதிலாக அது அமைந்து உள்ளது. அந்தக் கதையின்படி சிவபெருமானின் விந்துவை கொண்டு சென்ற அக்னி அதை குடிலா எனும் நதியில் போட்டு விட்டார். நதியில் மிதந்து சென்ற அது உதயகிரி மலைப் பகுதியில் இருந்த நாணல் புதரில் போய் ஒதுங்கி விட அங்குதான் கார்த்திகேயர் பிறந்தாரா ம். 6 கிருத்திகை நட்சத்திரங்களும் அவரை பாதுகாத்து வளர்த்ததினால் அவருக்கு ஷண்முகா என்ற பெயர் ஏற்பட்டது.
பிரும்மைவார்த புராணக் கதைப்படியும் சிவபெருமானின் விந்து ஷண்மு கா நதிக் கரையில் இருந்த நாணல் புதரில் சென்றுவிழ, அங்கு கார்த்திகே யா பிறக்க அவருக்கு அப்போது மயில் அவருக்கு வாகனமாக அமைந்த தாம். மேலும் பவிஷ்ய புராணத்தின்படி மார்சிக மாதத்தின் ஆறாவது நாளன்று அசுரன் தாரகாவை கார்த்திகேயா வதம் செய்தாராம்.
லிங்க புராணத்தில், மன்மதன் அழிக்கப்பட்ட செய்தியும், மேலும் சிவன் பார்வதி இருவருக்கும் பிறக்க இருக்கும் குமரனே தாரகாவை அழிக்கப் போகின்றான் என்றும் எழுதப்பட்டு உள்ளது. அதில் சிவன்-பார்வதியின் தவம் மற்றும் திருமணத்தைப் பற்றி மட்டும் கூறி விட்டு, குமரன் எப்படிப் பிறந்தார் என்பது பற்றிய விவரத்தைக் கூறாமல் விட்டு விட்டது. குமரன் அசுரன் தாரகாவை வதம் செய்ய பிறந்தவர் எனவும், அவரே நகைகள் அணிந்த விளையாட்டுப் பிள்ளையைப் போல ஜொலிக்கும் ஷண்முகன் என்றும் திரிபுரா வதம் பற்றி எழுதப்பட்டுள்ள பகுதியில் கூறுகின்றது. திரி புராவை வதம் செய்ய சிவபெருமான் சென்ற பொழுது குமரனும் அவருட ன் சென்றதாகவும் தெரிவிக்கின்றது. அசுரன் தாரகாவை சக்திவேல் கொ ண்டு ஸ்கந்த வதம் செய்தது அனைவரும் அறிந்ததே. ஸ்கந்த புராணக் கதையின்படி சக்தி ரக்தசங்கா என்ற மலைப்பகுதிக்குள்ள ஹடகா என்ற இடத்தில் இருந்த சமர்த்கபுரா என்ற பகுதியில் விழுந்து விட்டதால் அந்த இடத்தை ஸ்கந்தபுரா என்று அழைத்தனர். அந்த சக்தியின் பின் புறத்தை எவர் தன் கைகளினால் தேய்க்கின்றனரோ அவர்களை எந்த நோயும் அண்டாது என்ற நம்பிக்கையும் இருந்தது.
ஸ்கந்தரின் திருமணம்
இந்திரனின் மகளான தேவசேனாவை ஸ்கந்த மணம் புரிந்ததாக பிரும் மாண்ட புராணம் தெரிவிக்க, ஸ்கந்த புராணமோ ஸ்கந்த மணம் புரிந்தது எமதர்மனின் மகளான தேவசேனாவையே என்று கூறுகின்றது. வராக புராணத்தின்படி சிவபெருமான் முருகனுக்கு பல கலைகளை கற்றுத் தந்த பின் ஆசி கூறி விட்டு அவரே சேனைக்கு கணவனாக இருக்க வேண்டும் என்று கூறினார். தேவசேனா மற்றும் சேனா இரண்டுமே தேவர்கள் என்ப தினால் படைத் தலைவரான குமரனைக் குறித்து கூறப்படும் செய்தியே அந்தப் பெயர்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது.
பிரும்ம புராணத்தின் கதைப்படி ஸ்கந்த திருமணமே ஆகாதவர். அதற்கு ம் ஒரு காரணம் உண்டு. தாரகாவை ஸ்கந்த கொன்ற பின் பார்வதி தேவி ஒரு காரியம் செய்தாள். எந்தப் பெண்ணை ஸ்கந்த நோக்கினாலும் அவள் அவருக்குத் தாயாரான பார்வதியைப் போலவே காட்சி தருவாள். அதனா ல் இல்லற வாழ்கையில் நாட்டம் இன்றி அனைத்துப் பெண்களும் தனக்கு தாயாரே என்று கூறியபடி ஸ்கந்த பிரும்மச்சாரியாகவே வாழ்ந்தார்.
சிவபுராணத்தில் இது குறித்து வேறு விதமாக கூறப்பட்டு உள்ளது. ஒரு முறை ஸ்கந்த உலகை சுற்றி வந்து கொண்டு இருந்த பொழுது வழியிலே வந்த நாரதர் முருகனைத் அவருடையப் பெற்றோர்களிடம் இருந்து பிரித் து வைக்க அவருடைய தாய் தந்தை இருவரும் பிள்ளையாருக்கு திரு மணம் செய்து வைத்து விட்டதாகக் கூறினர். அதைக் கேட்ட ஸ்கந்த கோபம் கொண்டு அவருடைய தாய் தந்தை இருவரும் என்ன சமாதானம் கூறியும் அதை ஏற்காமல் இனி திருமணமே செய்து கொள்ள மாட்டேன் என்று கூறி விட்டு குருன்சா மலைக்குச் சென்று விட்டார்.
ஆகவே திருமணம் ஆகாததினால் முருகனை குமரன் என்று அழைத்தன ர். இதைதான் தமிழில் உள்ள புராணக் கதைகளில் உலகைச் சுற்றி வரும் போட்டியில் தன் பெற்றோர் தனது சகோதரன் வினாயகருக்கு சாதகமாக நடந்துகொண்டு பழத்தை அவருக்குக்கொடுக்கவே தன்னை ஏமாற்றி விட் டதாக எண்ணிக்கொண்டு பழனிமலைக்கு சென்று அமர்ந்துவிட்டார் என  எழுதிஉள்ளனர். அதுபோலவே சமஸ்கிருதநூல்களிலும் ஸ்கந்த வள்ளி யை மணந்துகொண்டதுகுறித்து எந்தக்குறிப்புகளும் காணப்படவில்லை.
புராணங்களில் கந்தன் வரலாற்றுக் கதைக்கு உள்ள முக்கியத்துவம்
வீ.எஸ்.அகர்வால் என்பவர் ‘குமார வித்தியா மற்றும் அதிசயக் குழந்தை யைப் பற்றிய வரலாற்றைக் கூறி, குமார அக்னி என்ற ருத்திரனும் முருக னும் ஒன்றே என்பதை உலகிற்கு உணர்த்தவே’ மத்சய புராணம் எழுதப் பட்டதின் காரணம் எனக்கூறி உள்ளார். பிரும்ம நூல்களில் சிவபெருமா னைப் பற்றிக் கூறுகையில் அவரை எட்டு அவதாரங்களான ருத்திரன், சிவன், பசுபதி, உக்கிரா, அசானி, பாவா, மகாதேவா மற்றும் இசானா என் ற பெயர்களில் உள்ளவர் என்று கூறுகின்றனர். இந்த எட்டு அவதாரங்களு ம் தனித் தனியாக இருக்கும் வரை உயிர் அற்றவை. அவை அனைத்தும் இணைந்தே குமரன் என்ற ஒன்பதாவது அவதாரம் எடுத்தன என்கின்றது.
ஸ்கந்தனின் உள்ளே அடங்கி உள்ளவை ஆறு சக்கரங்களின் சக்தி அல்ல து ஆறு கிருத்திகைகள். அதனால்தான் அவர் கார்த்திகேயர் ஆனார். ஓவ் வொரு சக்கரமும் ஓவ்வொரு கிருத்திகை சக்தியை குறிக்கும். மத்சய புராணத்தில் சிவபெருமானின் முக்கிய சேவகனான விராகா, ஸ்கந்த மற் றும் வினாயகரைப் பற்றி தெயவாகக் கூறப்பட்டு உள்ளது. இந்த புராணக் கதையின்படி சிவபெருமானுக்கு அதிக சேவகம் செய்த யானை தலை யைக் கொண்டவனை பார்வதி ஒரு வனத்தில் பார்த்தாள். அவனை தன் மகனாக ஏற்குமாறு சிவபெருமான் பார்வதியிடம் கூறினார். அவளும் அத ற்கு எந்தமறுப்பும் தெரிவிக்காமல் சம்மதித்து அவனை விராகா என அழை த்தாள். பின்னர் கூறப்பட்டுள்ள புராணக் கதைகளில் அவரைக் குறி த்து வேறு விதமாகக் கூறப்பட்டு இருந்தாலும் பார்வதியின் உடலில் இரு ந்து வெளி வந்தவர்களே வினாயகரும் முருகனும் என்கின்றன. வினாயக ரே விராகாவாகவும், விராகாவே ஸ்கந்தனாகவும ஆனார்கள். சேவலைப் பரிசாக த்வாத்சா என்ற முனிவர் கொடுத்ததின் காரணம் அவை எழுப்பிய ஓசைகள் உயிர் எழுத்துக்களை உச்சரிக்கும் வகையில் இருந்ததினால் தான் என்று கூறுகிறது. ஸ்கந்தன் அக்னியின் புதல்வர் என் பதால் அவரு க்கு பிடித்த பறவையாக சேவல் அமைந்தது.
குருன்சா வதம்
வாமன புராணத்தில் ஸ்கந்த குருஞ்சா மலையை உடைத்த கதை பற்றிக் கூறப்பட்டு உள்ளது. அசுரன் தாரகாவை ஸ்கந்த கொன்ற பின் மற்றொரு அசுரன் மகிஷா ஓடிச் சென்று குருஞ்சா மலைக்குள் ஒளிந்து கொண்டான். அவனையும் கொன்று விடுமாறு இந்திரன் அவரை வேண்ட, அந்த மலை யை உடைக்க வேண்டியதாயிற்று. ஸ்கந்தரின் பாட்டனாரான இமய மலையின் அதிபருடைய மகனே குருஞ்சா என்பவர் . ஆகவே அவரைக் கொல்ல முருகனுக்கு சங்கடமாக இருந்தது. அதனால் இந்திரன் கோபம டைய இருவருக்கும் அந்தவிஷயத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்கு வாதம்முற்ற இருவரில் எவன் பலசாலி என்று பார்க்க இருவரும் குருஞ்சா மலையை சுற்றி வரவேண்டும் என்றும், எவன் முதலில் குருஞ்சா மலை யை சுற்றிவிட்டு வருகின்றானோ அவனே இருவருக்குள் பலசாலி என்று ம் அதற்கு குருன்சா மலையே நீதிபதியாக இருப்பார் எனவும் முடிவு செய் தனர். அதன்படி இருவரும் மலையை சுற்றி வரத் துவங்க இந்திரனே வெற் றி பெற்றதாக ஒருபொய்யை குருஞ்சாகூற, அதனால் கோபமற்ற ஸ்கந்த அந்த மலையோடு மகிஷாவையும் சாய்த்தான். ஆனால் சிவபுராணத்தி லோபானா எனும் அசுரன் குருஞ்சா மலையைத் தாக்கியபொழுது ஸ்கந்த வந்து குருஞ்சாவை காப்பாற்றியதாக வேறுவிதத்தில் கூறப்பட்டுஉள்ளது
ஸ்கந்த மற்ற கதைகள்
ஸ்கந்த புராணத்தின்படி விஸ்வாமித்திரரே முருகனை பிரும்மசாரியாக இருக்கும்படிக் அறிவுறை தந்து அவரையும் ஆசிர்வதித்தார் என்றும், இந்திரன் ஒருமுறை ஸ்கந்த மீது இடியைத் தூக்கி வீச அந்த இடியில் இரு ந்து புதிதாய் பிறக்கும் குழந்தைகளை தூக்கிச் சென்று விடும் குணமுடை யவர்களான காகி, ஹிலிமா, ருத்திரா, விரசபா, அயா, பலாயா, மத்திரா என்ற பெண்கள் பிறந்தனர் என்றும் கூறப்பட்டு உள்ளது .
சிவபுராணத்தில் முருகனை பற்றி ஆவலைத்தூண்டும் ஒருகதை உண்டு. ஒருமுறை நாரதர் முருகனிடம் வந்து எங்கேயோ ஓடிப்போய்விட்ட தன் னுடைய ஆட்டைக் கண்டுபிடித்துத் தருமாறு கேட்டார். முருகனும் அதை  தேட தன்னுடைய உதவியாளர்களை அனுப்பினார். அந்த ஆட்டை அவர்க ள் விஷ்ணு இருந்த இடத்தில் கண்டு பிடித்த பின் எடுத்து வந்தனர். ஸ்கந்த அந்த ஆட்டின் முதுகில் அமர்ந்தபடி உலகம் முழுதும் உலா வந்த பின் ஆடு இன்றி திரும்பி வந்த முருகனிடம் ஆடு பற்றி நாரதர் கேட்க, இனி பலிதர ஆடுகளை உபயோகப்படுத்தாதீர்கள் என ஸ்கந்த அறிவுறைக்கூறி விட்டு, எதற்காக ஆட்டை பலி கொடுக்க நினைத்தார்களோ அந்த நோக்க த்தைத் தான் நிறைவேற்றி விட்டதாகக் கூறினார். இப்படி பல புராணக் கதைகள் இருந்தும். வள்ளி மணம் பற்றியோ சுராவின் வதம் குறித்தோ அவற்றில் எதுவும் கூறப்படவில்லை.
மூலக் கட்டுரை ஆங்கிலத்தில்: என். கங்காதரன்
தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

Ashwarooda Devi (T)



அஸ்வாரூடா தேவி என்பவள் பார்வதியின் சக்தியான திரிபுரசுந்தரி தேவியின் சக்தியில் இருந்து வெளியான தேவி ஆவாள். அஸ்வாரூடா தேவி எதற்காக படைக்கப்பட்டாள்? 

ஒருமுறை தனது தந்தை தக்ஷன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்ட பார்வதி தேவி அங்கு அவரால் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொண்டாள். இறந்து விட்ட மனைவியின்  உடலை தனது தோளில் சுமந்துகொண்டு உலகெங்கும் கோபத்துடன் சுற்றி ஒடத் துவங்கிய சிவபெருமானின் கோபத்தை தணிக்க எண்ணிய மகாவிஷ்ணு தனது சக்ராயுதத்தினால் சிவபெருமானின் தோளில் இறந்து கிடந்த பார்வதியின் உடலை துண்டு துண்டாக வெட்டி வீழ்த்த, அவள் உடலின் பாகங்கள் உலகெங்கிலும் பல இடங்களில் விழுந்தது. பின்னர் அவள் உடலின் பாகங்கள் விழுந்த இடங்களில் பார்வதிக்கு ஆலயங்கள் எழும்ப, அந்த ஆலயங்கள் சக்தி பீடங்களாயிற்று. அதனால் கோபம் தணிந்த சிவபெருமான் மீண்டும் தவத்தில் அமர்ந்து விட்டார். அதே நேரத்தில் விதியினால் ஏற்பட்டு இருந்த இந்த நிலை முடிவுற்றதும் தனது கணவருடன் மீண்டும் சேர வேண்டும் என்று எண்ணிய  பார்வதியின் ஆத்மாவும் ஹிமயமலையில் சென்று தவத்தில் அமர்ந்து கொண்டது.

இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டு இருந்தபோது தேவலோகத்தில் சூரபத்மன் எனும் அசுரனின் அராஜகம் எல்லை மீறி சென்று கொண்டு இருந்தது.  உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டு இருந்த சூரபத்மனுக்கு கிடைத்து இருந்த அபூர்வ வரங்களினால் சக்தி பெற்றவன் தேவர்கள் அனைவரையும் சொல்லொண்ணா துன்பத்தில் ஆழ்த்தி அவர்களுக்கு கொடுமைகளை செய்து வந்தான்.  தேவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆகவே அவனால் துன்பமுற்ற தேவர்கள் அனைவரும் விஷ்ணுவிடம் சென்று முறையிட அவரை தேடி அலைந்தார்கள். ஆனால் அவரை எங்குமே கண்டு பிடிக்க முடியவில்லை. ஆகவே அவர்கள் வேறு வழி இன்றி தவத்தில் அமர்ந்து இருந்த சிவபெருமானை எழுப்ப முயன்றார்கள். ஆனால் அவர் தவத்தை அவர்களால் கலைக்க முடியவில்லை என்பதினால் காதல் கடவுளான காமதேவன் எனும் மன்மதனை அனுப்பி அவர் தவத்தைக் கலைக்க வைக்க, அதனால் கோபமுற்ற சிவபெருமான் தனது தவத்தை கலைத்த மன்மதனை தனது மூன்றாம் கண்களினால் எரித்து விட்டார். அதைக் கண்டு பயந்து போன தேவர்கள் தாங்கள் செய்த தவறுக்கு அநியாயமாக மன்மதன் பலியாகி விட்டானே என வருத்தம் அடைந்து சிவபெருமானிடம் சென்று தங்களுடைய தவறுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எரிந்து சாம்பலாகிவிட்ட மன்மதனுக்கு மீண்டும் உயிர் பிச்சைக் கொடுக்குமாறு அவரிடம் வேண்டினார்கள். கருணைக் கொண்டு அவர்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் எரிந்து சாம்பலாகி விட்ட மன்மதனை மீண்டும் உயிர் பிழைக்க வைத்தார். ஆனால் துரதிஷ்டவசமாக மன்மதனுடன் அந்த சாம்பலில் இருந்து பண்டாசுரன் என்ற இன்னுமொரு அசுரனும் வெளி வந்தான். அதுவும் பரமாத்மனின் விதியால் விளைந்த ஒன்றாகும். அவன் சூரபத்மனின் வம்சத்தை சேர்ந்தவன். எந்த ஒரு தாயின் கருவில் இருந்தும் வெளிவராத ஒரு பெண்ணால் மட்டுமே அவனுக்கு அழிவு ஏற்படும் என்ற வரத்தை பெற்று இருந்தவன். சாம்பலில் இருந்து வெளிவந்த அந்த அசுரனோ சூரபத்மனைவிட அதிக துன்பங்களை தேவர்களுக்கு தந்து அவர்களை பல தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். சூரபத்மன் போதாதென்று பண்டாசுரனின் அட்டகாசத்தினால் அவதிப்பட்ட தேவர்கள் மீண்டும் விஷ்ணுவை தேடிச் சென்று அவரிடம் பண்டாசுரனின் கொடுமைகளைக் கூறி தம்மை அவன் பிடியில் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினார்கள்.

சூரபத்மனுக்கு அழிவு என்பது சிவபெருமான் மற்றும் பார்வதிக்கு பிறக்கும் மகனால் மட்டுமே நடக்கும், அதற்கான காலம் இன்னும் கனிந்து வரவில்லை என்பதை மகாவிஷ்ணு உணர்ந்தார். முதலில் பண்டாசுரன் மடிய வேண்டும், அதற்கு பின்னரே சூரபத்மனின் மரணமும் நிகழும் என்பது விதியாக இருந்ததினால் தேவர்களை பார்வதி தேவியிடம் சென்று அவளிடம் முறையிடுமாறு அறிவுரைக் கூறி அனுப்பினார். ஏன் என்றால் பண்டாசுரனை ஒரு பெண்ணால் மட்டுமே அழிக்க முடியும் என்பதே விதியாக இருந்தது. பராசக்தியே படைப்பவள் மற்றும் தானே படைத்ததை அழிப்பவளும் ஆவாள் என்பதே பிரபஞ்ச தத்துவமாக இருந்தது (அவளே படைப்புக் கடவுள் பிரும்மனையும், அழிக்கும் கடவுளான சிவபெருமானையும் படைத்தவள் என்பதினால் இப்படியாகக் கூறப்பட்டது). அவர் கூறிய அறிவுரையின்படி அவர்களும் அக்னியை வளர்த்து பண்டாசுரனை வதைக்க பார்வதி தேவியை வேண்டி பிரார்த்தனை செய்ய, அவளும் பண்டாசுரனை அழிக்க அந்த அக்னி மூலம் தனது சக்தியில் இருந்து படைக்கப்பட்ட அதிஅற்புத சுந்தரியும், அழகில் நிகரற்றவளும், ஆறு சக்திகளை உள்ளடக்கியவுளுமான திரிபுரசுந்தரி எனும் ஒரு தேவியை அனுப்பி வைத்தாள். திரிபுர என்பது ஆறு என்ற எண்ணைக் குறிக்கும் என்பதினால்  ஆறு அபார சக்திகளை உள்ளடக்கிய அவளுக்கு திரிபுரசுந்தரி என்ற பெயர் வந்தது. அக்னியில் இருந்து வெளிவந்த திரிபுரசுந்தரி நேராக மன்மதனிடம் சென்று பார்வதியின் ஆணைப்படி அவரை மணந்து கொண்டாள்.

திரிபுரசுந்தரி மன்மதனை மணந்து கொண்டதும் தேவர்கள் அனைவரும் மன்மதனிடம் சென்று பண்டாசுரனை அழிக்குமாறு அவரிடம் வேண்டிக் கொள்ள, அவரும்  தனது மனைவியான திரிபுரசுந்தரியிடம் அவர்களது வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொள்ள, திரிபுரசுந்தரி அந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதி தந்தாள். அடுத்து பண்டாசுரனை எப்படி வதம் செய்யலாம் என அவள் யோசனை செய்தபோது அவளுக்கு முன்னொரு காலத்தில் நடைபெற்ற யுத்தம் ஒன்று நினைவுக்கு வந்தது.  அந்த யுத்தத்தில் சிவபெருமானுக்கு துணையாக பூமாதேவி அவருக்கு தேராக மாற, சந்திர சூரியர்கள் அந்த தேரின் சக்ரங்களாகவும், மேரு மலை வில்லாகவும், விஷ்ணு அதன் அம்பாகவும் மாறிக்கொள்ள, பிரும்மாவும் தேரோட்டியாக அமர்ந்து கொண்டார். நான்கு வேதங்களும் மந்திர சக்தி வாய்ந்த வெல்ல முடியாத குதிரைகள் ஆயின.  சிவபெருமானும் தமது உடலின் இருந்து வெளிவந்த சக்தியில் இருந்து பெரும் சேனையை வெளிவரச் செய்து அவர்களுடன் சேர்ந்து தேவர்கள் மற்றும் அனைத்து கடவுட்களின் துணையுடன் அந்த யுத்தத்தில் வெற்றி பெற்ற ரகசியம் அவளுக்கு நினைவுக்கு வர உடனடியாக தனது சக்திகணங்களை  உடலில் இருந்து பல துணை தேவதைகள் மற்றும் சேனைகளாக்கி வெளிவரச் செய்தாள். அப்படி வெளிவந்த தேவதைகள் அனிமா, மகிமா, பிராம்மி, கௌமாரி, வைஷ்ணவி, வராஹி, மகிந்தரி, சாமுண்டி மற்றும் மகாலஷ்மி போன்ற பெயர்களைக் கொண்டவர்கள் ஆவர். அவர்களுக்கு அந்தப் பெயர்கள் வரக் காரணமான கதைகள் தனியானது. அவர்களைத் தவிர தனக்குத் துணையாக ஆவர்ண தேவதைகளையும் படைத்தாள். ஒரு சக்கரத்தில் நடுவில் அமர்ந்து கொண்டவளை சுற்றி முற்றிலும் பெண்களேயான தேவதை படையின் துணைக்கு யானை, குதிரை மற்றும் காலட் படைகளையும் தனது சக்தியினால் வெளிக்கொண்டு வந்தாள். யானைப் படையின் தலைவியாக சம்பட்கரி என்ற தேவி இருக்க திரிபுரசுந்தரியின் கையில் இருந்த பாசபாணம் எனும் பாசக் கயிற்றில் இருந்து திரிபுரசுந்தரிக்கு யுத்தத்தில் பெரும் துணையாக இருந்து வெற்றியை தரக்கூடிய தேவியாக அஸ்வரூடா எனும் தேவியும் வெளிவந்தாள். அக்னித் தீயில் இருந்து வெளிவந்த திரிபுரசுந்தரியின் உடலில் இருந்த சக்தியினால் வெளிவந்த அஸ்வாரூடை சிவப்பு நிற சேலையில் ஜொலித்தபடி காணப்பட்டாள். அவள் தலைமையில் பெரிய குதிரைப் படையும் வெளி வந்தது. குதிரைப் படைக்கு தலைமை தாங்கியபடி அஸ்வரூடா தேவியானவள் மிகப் பெரிய, கம்பீரமான, தூய வெள்ளைக் குதிரை மீது அமர்ந்து கொண்டு வெளிவந்தாள். அவள் கையில் தங்கக் கோல் ஒன்று மின்னியது. அது ஐம்புலன்களை மட்டும் அல்லாமல் அனைத்து புலன்களையும் அடக்கும் சக்தி கொண்ட தண்டம் ஆகும்.  வெள்ளைவெளீர் என பளிச்சிட்ட அவளது குதிரை யாராலும் என்றுமே வெல்ல முடியாத சக்தி மிக்க குதிரையாக இருந்ததினால் அந்த சக்தியை குறிக்கும் சொல்லான அபராஜிதா என்ற பெயரை அந்தக் குதிரை பெற்றது.

யுத்தமும் துவங்கியது. உடனடியாக அஸ்வாரூடையும் தனது கையில் இருந்த தண்டத்தில் பண்டாசுரனின் அனைத்து புலன்களையும் சக்தியையும் உறிஞ்சிக் கொண்டாள். அவ்வளவுதான் பண்டாசுரனின் சக்திகளும், ஐம்புலன்களும் அவன் படையின் சக்தியோடு சேர்ந்து அவள் தண்டத்தில் புகுந்து அழிய சக்தியற்ற நிலையில் இருந்த பண்டாசுரனை திரிபுரசுந்தரி அவன் சேனையோடு அழித்தாள்.  இதன் தாத்பர்யம் என்ன?

ஒருவர் தன்னுடைய ஐம்புலன்களையும் அடக்கிக் கொள்வதின் மூலம் மனதில் தோன்றும் மற்ற அனைத்து சலனங்களையும் அழித்துக் கொண்டு விடுகிறார். அப்போது அவர்களின் முழு கவனமும் தம்மை மறந்த நிலையில் சென்று ஒரே நிலையை நோக்கியபடி இருக்கும். அப்போது மனதில் வேறு யோசனைகள் செய்ய இடம் இருப்பது இல்லை. இந்த நிலையை எடுத்துக் காட்டுவதே அஸ்வாரூடை தேவி அவளது தண்டம் மூலம் பண்டாசுரனின் ஐம்புலன்களையும் சக்தியையும் தன்னுள் இழுத்துக் கொண்டு அவனை சக்தியற்றவனாக்கி  அழிய வைத்த நிலை ஆகும்.

பண்டாசுரனை அழித்தது என்பது அவன் உடலை அழித்த நிலை ஆகும். அவன் ஆத்மாவை அல்ல. ஏன் எனில் அவனது அனைத்து புலன்களையும் உள்ளடக்கிய ஆத்மாவை தன் தண்டத்தில் முதலிலேயே இழுத்துக் கொண்டு விட்டத்தின்  மூலம் அவனை தன் வசம் இழுத்துக் கொண்டு விட்டாள் அல்லவா. அப்போதே அவன் ஒரு சக்தியும் இல்லாத ஜடமாகி விட்டான். ஒரு ஆத்மாவின் ஜனனமும் மரணமும் ஒரே இடத்தில்தான் அதாவது பராசக்தியிடம் உற்பத்தி ஆகி முடிவையும் பெறுகிறது என்பதை எடுத்துக் காட்டவே ஐம்புலன்களையும் கொடுத்து பண்டாசுரனை படைத்த அந்த தெய்வமே முதலில் அவனுடைய ஐம்புலன்களையும் தன்னுடைய இன்னொரு அவதாரமான அஸ்வாரூடா தேவி மூலம் தன்னிடம் திரும்ப எடுத்துக் கொண்டு  தன்னுடைய இன்னொரு அவதாரமான திரிபுரசுந்தரி எனும் தேவி மூலம் அழித்த நிலையைக் காட்டுவது ஆகும்.  அஸ்வாரூடா தேவி  என்பவள் யார்?  பராசக்தியின் உடலின் சக்தியில் இருந்து வெளிவந்த திருபுரசுந்தரியின் கையில் இருந்த   பாசக்கயிற்றில் இருந்து  வெளியானவளே அஸ்வாரூடா தேவி என்பதினால் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தன்  சக்தியில் இருந்து வெளிப்படுத்திய இன்னொரு சக்தியில் இருந்து வெளிப்படுத்திய அஸ்வாரூடா தேவி என்பவளும் பராசக்தியின் இன்னொரு அம்சமேயாகும்.  இப்படியாக படைத்தவளே பல்வேறு ரூபங்களில் தோன்றி தானே படைத்தவனை அழித்தாள். இதன் மூலம் உணர்த்தப்படும் தத்துவார்த்த உண்மை என்ன?

ஆன்மீக ஞானம் பெற்று கடவுளிடம் முழுமையாக சரண் அடைந்து விட வேண்டும் என்று நினைக்கும் ஒருவர் முதலில் என்ன செய்ய வேண்டும்? தன் ஐம்புலன்களையும் அடக்கி, வேறு எந்த எண்ணத்தையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தனது சக்தி முழுவதையுமே அந்த கடவுளின் காலடியில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த நிலைக்கு தன்னை ஆளாக்கிக்  கொண்டதும் அவன் மனது வெறுமை ஆகி விடுகின்றது. வேறு யோசனை செய்யும் நிலையில் அவன் இருப்பதில்லை. அப்போதுதான் அவன் ஞானம் பெற்று மோட்ஷத்தை அடைவான். இந்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் முதலில் ஐம்புலன்களையும் அழிக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதே பண்டாசுரன் மற்றும் அவனது சேனையின் ஐம்புலன்களையும் முதலில் தமது தண்டத்தில் அடக்கிக் கொண்டு அவர்களை அஸ்வாரூடை அழித்த நிலை ஆகும்.

பண்டாசுர யுத்தம் முடிந்தது முதல் உலகெங்கும் இருந்த மன்னர்கள் அடுத்த நாடுகள் மீது படையெடுத்து தம் ஆட்சியில் அந்த நாட்டை இணைத்துக் கொள்ள எண்ணியபோது முதல்படியாக அஸ்வமேத யாகத்தை செய்யலானார்கள். தாம் யுத்தத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அஸ்வமேத யாகம் செய்து, அந்த யாகத்தில் பிரதானமாக அஸ்வாரூடை தேவியை பிரார்த்தனை செய்து கொண்டு தனது நாட்டு கொடியுடன் கூடிய அஸ்வாரூட யாக தண்டத்தை யாக குதிரை மீது கட்டி அதை எந்த நாட்டைக் கைப்பற்ற எண்ணினார்களோ அடுத்த நாடுகளில் ஓட விடுவார்கள். அந்த குதிரை எந்த நாடுகளில் எல்லாம் தடை இன்றி ஓடிச் செல்லுமோ அந்த நாட்டு அரசர்கள் தாம் யுத்தம் செய்ய விரும்பவில்லை என சரண் அடைந்த நிலையை காட்டியது. ஆனால் எந்த நாட்டு மன்னன் அந்த குதிரையின் ஓட்டத்தை தடுத்து நிறுத்த முயல்வானோ அவர்கள் யுத்தம் செய்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ள நேரிட்டது.

அஸ்வாரூடை எப்படி பண்டாசுரனின் புலன்களையும் சக்தியையும் தமது தண்டத்தில் அடக்கிக் கொண்டு வெற்றி கொண்டாளோ அதைப் போலவே அஸ்வமேத யாகத்தில் அஸ்வாரூடையின் அருளைப் பெற்ற மன்னர்களும், எதிரி நாட்டு மன்னர்களின் சக்தியை யாக குதிரையின் மீது வைத்துள்ள அஸ்வாரூட தண்டம் தன்னுள் அடக்கிக் கொண்டு விடும், அப்போது அவர்கள் தமது பலத்தை இழந்து தம்மிடம் சரண் அடைந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை கொண்டார்கள். முதலில் அஸ்வாரூடா யாகம் என்றே அழைக்கப்பட்டு வந்திருந்த யாகம் காலப்போக்கில் இன்னும் பல மந்திரங்களை உள்ளடக்கிய யாகமாகி அஸ்வமேத யாகம் என மருவியது என்பதாக சில பண்டிதர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள். அஸ்வா என்பது குதிரையைக் குறிப்பதாகும்.

பண்டாசுரனின் அழிவிற்கு மூல காரணமே அவன் புலன்கள் அனைத்தையும் அஸ்வாரூடையின் தண்டம் ஆக்ரமித்துக் கொண்டு அவனது  மனதை  வேறு  எந்த யோசனையையும் செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதுதான்.  மனது வெறுமை ஆகிவிடும்போது  ஒருவனுடைய அலைபாயும் புலன்கள் அனைத்தும் அடக்கப்பட்ட நிலைக்கு சென்று அவன் உணர்வற்ற ஜடமாகி விடுகிறான். உணர்வும் உடம்பும் ஜடமாகி விட்டவன் மரண நிலைக்கு சென்று  விடுகிறான்.   இந்த நிலைக்கு  பண்டாசுரனை  அஸ்வாரூடை தேவி கொண்டு செல்ல, அந்த நிலையில் இருந்தவனை திரிபுரசுந்தரி  எளிதில் வீழ்த்தி அழிக்கின்றாள்.

பண்டாசுர வதத்தில் வெளிவந்த அஸ்வாரூடையின்  தோற்றத்தின்  மூலம் புலன்களை அடக்கும் மூல தத்துவத்தை  நம்மால் அறிந்து கொள்ள முடிந்தது.  உணர்வுகள் ஜடமாகி விடத் துவங்கும்போது வாழ்கையின் இன்பமோ, துன்பமோ  அதன் நிகழ்வுகள் நம்மை எந்த விதத்திலும் பாதிப்பது இல்லை. மன பயம் விலகி எதையும் எதிர்கொள்ளும் ஆத்ம சக்தி பெறுகிறோம்.  மரணத்தை தொடும்வரை ஆத்ம சக்தி பெற்றவர்களது வாழ்கை எளிதாகி, இனிமையாகி விடும். அந்த நிலைக்கு சென்று விடும்போது மனவிடுதலை பெற்று ஆத்ம ஞானம் பெறுவார்கள்.  ஆத்ம ஞானம் பெற்றவன் இறைவன் அருளை பரிபூரணமாக பெற்று விட்டவன் ஆகிறான். ஆகவே நாம்  அலை பாயும்  நமது புலன்களை அடக்கிக் கொண்டு, ஆத்ம சக்தி பெற்று  வாழத் துவங்க வேண்டும் எனில் முதலில் ஐம்புலன்களையும் அடக்கவல்ல சக்தி தரும்  அஸ்வாரூடையின் அருளை முழுமையாகப்  பெற வேண்டும்.  

ஆகவேதான் அஸ்வாரூடையை மனதார துதித்து வந்தால் அலைபாயும் மனது கட்டுப்படும், எண்ணங்கள் சீரடையும். எப்போது சீரான எண்ணங்கள் மனதில் தோன்றத் துவங்குமோ அப்போதே மனமும் அமைதி பெற்று உள்ளத்தின் ஆத்ம சக்தியும் பெருகும். தினமும் குளித்தப் பின் 108 முறை கீழ்கண்ட ஸ்லோகத்தை ஜபம் செய்தால் நமக்கு ஏற்ப்படும் தீமைகள் அழியும் என்பார்கள்.  அந்த ஸ்லோகம் இது:

அம்பிகா அனாதினிதான அஸ்வாரூட அபராஜிதா

-:இந்த பிரார்த்தனையின் பொதுவான அர்த்தம் இது :-

''உலகைக் காக்கும் அம்பிகையின் சக்தியில் இருந்து வெள்ளை குதிரை மீது அமர்ந்தபடி வெளிவந்துள்ள அஸ்வாரூடை தேவியே, உன்னை நான் மனதார தியானிக்கிறேன். நீயே என்னுடன் இருந்துகொண்டு, அலைபாயும் என் மனத்தைக் கட்டுப்படுத்தும் சக்தியை கொடுத்து என்றும் அமைதியோடு இருக்க எனக்கு அருள் புரிய வேண்டும். தேவியே உன்னிடமே நான் என் மனதை முழுமையாக சரணடைய வைக்கின்றேன்''.

அதைப் போலவே அஸ்வாரூடை படத்தை வீட்டு வாயிலில் காவல் தெய்வமாக மாட்டி வைத்தால் வீட்டில் தீய சக்திகள் நுழைய முடியாது. காரணம் அஸ்வாரூடை எதிரில் வரும் தீய சக்திகளின் அனைத்து சக்திகளும் அவள் கையில் உள்ள தண்டத்தில் அடங்கி விடுவதினால் தீய சக்திகளினால் வீட்டில் நுழைந்து தீமைகளை விளைவிக்க முடியாது.  அப்படி  நுழைந்தாலும் வீட்டில் உள்ளவர்களை அவற்றினால் ஒன்றும் செய்ய இயலாது போய்விடும்.

இதனால்தான் இன்றுள்ள நிலையில் அமைதி கிடைக்க பல காலம் மறைந்து  வந்திருந்த அஸ்வாரூட யாகங்கள் மற்றும் ஹோமங்கள் மீண்டும் அங்காங்கே நடக்கத் துவங்கி உள்ளன. கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள  வைகோம்  மகாதேவர் ஆலயத்தில் அஸ்வாரூடையின் யாகமும், ஹோமமும் நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள்.

Goddess Jhesta Devi (Goddess Moodevi)- T



நம் வீடுகளில் யாராவது ஆத்திரம் கொண்டு மற்றவர்களை திட்டும்போது மூதேவி....மூதேவி என்று கூறுவது உண்டு. அப்படிக் கூறினால் திட்டப்படுபவர்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள், அதிருஷ்டமே இல்லாதவர்கள், அவர்கள் இருக்கும் இடத்தில் தரித்திரம் நிலவும் என்று எண்ணுவதால் அந்த வார்த்தையை கெட்ட வார்த்தையாக எண்ணி உபயோகிக்கிறார்கள். புராணங்களின்படி அவள் மஹாலஷ்மியின் மூத்த சகோதரி ஆவார். லஷ்மி தேவியைப் போல அழகான உருவில் இல்லாமல் அமங்கலமான உருவில் இருந்தாலும் உலகில் உள்ள அறுபத்தி நான்கு தரித்திரங்களை விலக்கி வாழ்வில் வசந்தம் ஏற்பட வழி தருபவள் அவளேயாகும். மூதேவி என ஒருவரை திட்டுவதின் மூலம் அவளை நம்மை அறியாமல் ஆராதிக்கின்றோம் என்பதே உண்மையாகும். மூதேவி எனும் ஜேஷ்ட தேவி யார்?

வாழ்க்கையில் ஒருவர் செய்யும் தீய மற்றும் நல்ல குணங்களை எடுத்துக் காட்டி, அவற்றின் பலாபலன்களை உலகத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மஹாவிஷ்ணு மூதேவியைப் படைத்தாராம். மூதேவியை பத்தாம் நூற்றாண்டுவரை பல்லவ மற்றும் சோழர்கள் காலத்தில் மக்கள் வணங்கி வந்துள்ளார்கள். முக்கியமாக தென் இந்தியாவின் பல ஆலயங்களிலும் அவளை போற்றி ஆராதித்து உள்ளார்கள். அவளை மூதேவி என தென் இந்தியாவிலும் ஜேஷ்ட தேவி என வட இந்தியாவிலும் அழைக்கின்றார்கள்.
காஞ்சி ஆலயத்தில் மூதேவி எனும் 
ஜேஷ்ட தேவியின் சிலை

பல்லவ மற்றும் சோழர்கள் காலத்தில் மன்னர்கள் கட்டிய பல ஆலயங்களில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு தனி சன்னதிகள் அமைத்து இருந்தார்கள். சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ள திருச்சி திருவானைக்காவல் ஆலயத்திலும் கூட அவள் வழிபடப்பட்டு வந்துள்ளது தெரிகின்றது. மூதேவி எனப்படும் ஜேஷ்ட தேவி லஷ்மி தேவிக்கு முன்பாக அவதரித்து அவளுக்கு மூத்தவளானவளாக இருந்துள்ளார். லஷ்மி தேவி அவதரிக்கும் முன் அவள் வெளிப்பட்டதினால் மூத்தவள் என ஆகி, மூத்த தேவி அதாவது முதலில் வந்த தேவி என்பதாக இருந்த சொல் மெல்ல மெல்ல வாய்மொழிப் பேச்சில் மூதேவி என மருவி உள்ளது. அதே போல சமுஸ்கிருத மொழியிலும் ஜேஷ்ட என்றால் மூத்த என அர்த்தம் இருப்பதினால் லஷ்மி தேவிக்கு மூத்தவளான மூதேவியை மூத்த தேவி என்ற பொருளில் வடமொழியில் ஜேஷ்ட தேவி என அழைக்கின்றார்கள். மூதேவி எனப்படும் ஜேஷ்ட தேவியின் வரலாற்றுக் கதை கீழே உள்ளது.

அவள் அவதாரம் குறித்து பல கதைகள் உலவுகின்றன. பத்மபுராணக் கதையின்படி தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது முதலில் அதில் இருந்து ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை உலகின் நன்மையைக் கருதி சிவபெருமான் முழுங்கியவுடன் அடுத்து அதில் இருந்து அமங்கலமான உருவில் ஒரு பெண் வெளி வந்தாள். அவளைத் தொடர்ந்து லஷ்மி தேவியும், பிற தெய்வங்களும் வெளிவந்தார்கள்.

மூதேவி எனும் ஜேஷ்ட தேவி குறித்த கிராமிய வாய் மொழிக் கதையின்படி தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து கடலைக் கடைந்து அமிர்தத்தைக் எடுத்தபோது அதில் இருந்து முதலில் வெளிவந்த அமங்கலமான தோற்றம் கொண்டப் பெண் யார் என்று தேவர்கள் விஷ்ணுவைக் கேட்டபோது அவர் அப்படி அப்படி வெளி வந்தவள் லஷ்மியின் அவதாரமே என்றும், அவள் முதலில் வெளி வந்ததினால் அவள் அவள் அனைத்து பெண் தெய்வங்களுக்கும் மூத்த சகோதரி ஆவாள் என்றும் அவளை சில குறிப்பிட்ட காரணங்களுக்காக தாம் படைத்ததாகவும் கூறினார்.

பெண் தெய்வங்களில் முதன்மையானவள் பார்வதி தேவி என்பதினால், முதலில் வெளி வந்த மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அனைத்து பெண் தெய்வங்களுக்கும் மூத்த சகோதரி ஆவாள் என்று விஷ்ணு கூறியதைக் கேட்டவர்கள் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி நிச்சயமாக பார்வதியின் அவதாரமாகவே இருக்க வேண்டும் என நம்பினார்கள்.

அதன் பின் நடைபெற்ற நிகழ்சிகளுக்குப் பின்னர் தேவர்களுக்கு அமிர்தம் கிடைத்ததும், அதைக் கொண்டாடும் வகையில் அனைவரும் ஒன்று கூறி சர்வேஸ்வரனான சிவபெருமானையும், தம்மைக் காத்த விஷ்ணுவையும் வணங்கித் துதித்தார்கள். அப்போது அங்கிருந்த தேவர்களின் சார்பாக நாரத முனிவர் விஷ்ணுவிடம் அவர் மணக்க உள்ளது லஷ்மிகரமான லஷ்மி தேவிதான் எனும்போது முதலில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை ஏன் படைத்தார் எனக் கேட்டார். அதற்கு அங்கிருந்தவர்களிடம் விஷ்ணு பகவான் கூறலானார் :

'என்னுடன் வெளிவந்த பிரும்மா உலகைப் படைத்தபோது சில நியமங்களுக்கு உட்பட்டே அவரால் அதை படைக்க வேண்டி இருந்தது. முதலில் படைக்கப்பட்ட சத்ய யுகத்தில் மனிதர்கள், மிருகங்கள், செடி கொடிகள் மற்றும் மரங்கள் போன்றவை படைக்கப்பட்டன. மனிதர்களில் அனைத்து உயிரினங்களும் நல்ல குணங்களைக் கொண்டவையாக இருக்குமாறு படைக்கப்பட்டு விட்டால் மரணம் அடைந்ததும் அவை அனைத்துமே சொர்கத்துக்கு சென்று விடும். சொர்கத்துக்கு செல்லும் ஆத்மாக்கள் மறு பிறப்பு எடுப்பது இல்லை. ஆகவே படைக்கப்பட்ட அனைத்துமே சொர்கத்துக்கு சென்று விட்டால் அவை அடுத்து வர உள்ள யுகத்துக்கு செல்ல முடியாமல் அந்த யுகங்கள் படைக்கப்பட்டத்திற்கும் அர்த்தம் இல்லாமல் போய்விடும். இரவும் பகலும் மாறி மாறி வருவது போல- தீமைகளும், நன்மைகளும் சேர்ந்தே வந்து கொண்டு இருந்தால்தான் உயிரினங்களில் உள்ள மனிதப் பிறவிகளுக்கு பிரகிதியின் தத்துவம் என்ன என்பதும், நன்மை தீமை என்பது என்ன, அதன் விளைவுகள் என்ன என்பதெல்லாம் புரியும். அந்த நிலை நிலவினால்தான் அடுத்தடுத்து வர உள்ள யுகங்களின் தத்துவம் மக்களுக்கும் புரியும் என்பதை மனதில் கொண்டே மனிதப் பிறவிகளுக்கு நன்மை மற்றும் தீமைகளை எடுத்துக் காட்டும் இரு அவதாரங்களை நான் உருவாக்க வேண்டி இருந்தது.

பிரும்மாவினால் முதலில் நான்கு யுகங்கள் படைக்கப்பட்டன. ஒவ்வொரு யுகத்திலும் குறிப்பிட்ட விகிதாச்சார அளவில் பல்வேறு ஜீவ ராசிகள் வாழ வேண்டும் என்பது விதியாயிற்று. படைக்கப்பட்ட மனிதர்கள், விலங்குகள், செடி கொடிகள் மற்றும் மரங்கள் என அனைத்திலும் அவற்றின் தன்மைகளுக்கு ஏற்ப உயிர்கள் தரப்பட்டு முதல் யுகமான சத்ய யுகத்தில் பிரும்மாவினால் படைக்கப்பட்டன. அவற்றின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அந்த உயிரினங்கள் அவற்றின் வாழ்க்கைக் காலம் முடிந்ததும் அடுத்தடுத்த யுகங்களில் பிறவி எடுக்கச் செல்லும் என்பதும் நியதி ஆகியது.

பரமாத்மனின் நியதியின்படி முதல் யுகமான சத்ய யுகத்தில் படைக்கப்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கை மட்டுமே நிரந்தரமானது. அடுத்தடுத்து வரும் யுகங்களில் பிரும்மாவினால் புதிய உயிரினங்களைப் படைக்க முடியாது. சத்ய யுகத்தில் படைக்கப்பட்டுள்ள உயிரினங்களே அடுத்தடுத்த யுகங்களில் அவையவை செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வெவ்வேறு ரூபங்களில் நுழைகின்றன. ஆனால் சத்ய யுகத்தில் படைக்கப்பட்ட அதே அளவிலான எண்ணிக்கையில் அந்த உயிர்கள் அடுத்தடுத்த யுகங்களில் பிறவி எடுக்க முடியாது. அவை அனைத்தும் அவை செய்த நன்மை மற்றும் தீமைகளுக்கு ஏற்ப அதே உயிரினமாகவோ அல்லது வேறு உயிரினமாகவோ வெவ்வேறு தோற்றங்களில் பிறவி எடுக்கும். அத்தனை ஏன், அவற்றில் சிலவற்றுக்கு அடுத்த யுகத்திலேயே பிறவி கிடைக்காமலும் போக வாய்ப்புண்டு. இரண்டு யுகத்துக்குப் பிறகு மூன்றாம் யுகத்தில் கூட அவை பிறப்பு எடுக்க காத்திருக்க வேண்டி இருக்கலாம்.

முதலில் படைக்கப்பட்ட நான்கு யுகங்களில் முதன்மையான சத்யயுகத்தில் மனிதர்கள், விலங்குகள், நீ வாழ்வன, செடி கொடிகள் மற்றும் மரங்கள் என பலவற்றையும் அதனதற்கு உரிய தக்க உயிரினத்துடன் பிரும்மா படைத்தார். படைக்கப்பட்ட ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட கால அளவிலான ஆயுள் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. அந்த உயிரினங்களின் ஆயுள் முடிந்தவுடன் அவை மீண்டும் பிறவா நிலைக்கு சென்று விடும். ஒருவேளை அவை செய்யும் நல்ல செயல்களினால் அவற்றின் மீண்டும் பிறவாமை எனும் நிலையை (சொர்கத்தை அடைந்துவிட்ட நிலை) சத்ய யுகத்திலேயே அடைந்து விட்டால் அவை அடுத்த மூன்று யுகங்களும் முடிந்து மீண்டும் சத்ய யுகம் படைக்கப்படும்போதுதான் அங்கு புதிய பிறவி எடுக்கும். அதுவரை அந்த உயிரினங்கள் அடுத்தடுத்து வர உள்ள மூன்று யுகத்திலும் எந்த ரூபத்திலும் பிறவி எடுக்காமல் சொர்க்கத்தில் தங்கி இருக்கும். ஆனால் படைக்கப்பட்ட அனைத்திற்குமே மீண்டும் பிறவாமை என்ற பாக்கியம் கிடைக்காது. அவற்றில் சிலவற்றுக்கு மட்டுமே அந்த புண்ணியம் கிடைக்கும். அந்த கணக்கு உங்களுக்கு புரியாது. மீண்டும் புதிய சத்ய யுகம் படைக்கப்படும்போது முந்தைய சத்ய யுகத்தில் படைக்கப்பட்ட விகிதாரசாரத்தின்படி உயிரினங்கள் படைக்கப்பட மாட்டாது. அது வேறுபட்டு இருக்கும். இது பரமாத்மனின் நியதியாகும். ஆகவே பிறவா நிலை எடுக்க வேண்டும் எனில் நிறைய நல்ல செயல்களை புரிய வேண்டும். ஆகவேதான் தீயவை, நல்லவை எது என்பதை நன்கு புரிந்து கொண்டு நல்லவற்றைக் கடைபிடிக்க மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் இரண்டு தன்மைகளைக் கொண்ட தெய்வீகங்களைப் படைத்தேன்.

விஷ்ணு கூறிக் கொண்டிருந்ததை அனைவரும் மெளனமாக கேட்டுக் கொண்டு இருந்தார்கள். 'அதனால்தான் என் மனைவி லஷ்மியின் உருவை இரண்டாக்கி தீமைகளை எடுத்துக் காட்டும் ஒரு அவதாரத்தை முதலில் வெளிப்பட வைத்தேன். அந்த அவதாரமான மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தீமைகளின் இருப்பிடத்தில் இருந்து கொண்டு தீமைகளை செய்பவர்களுக்கு தீமைகளின் விளைவுகளை எடுத்துக் காட்டி அவர்களை நல் வழியில் செல்ல வழி வகுக்க வேண்டும் என்றே தீமைகளையும் தரித்திரத்தையும் தருபவளாக மூதேவி எனும் ஜேஷ்ட தேவி இருப்பாள் என்ற நோக்கத்தில் அவளை வெளிவர வைத்தேன். ஆகவே லஷ்மியே இரண்டு உருவங்களில் இரண்டு தன்மைகளுடன் இருக்கின்றாள். மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வெளியில் அமங்கலமாகத் தெரிந்தாலும், அவளை மக்கள் முதலில் வெறுத்தாலும் காலப்போக்கில் அவளே நன்மைக்கான பாதையை அமைப்பதற்காக தமக்கு துன்பங்களைத் தந்து நன்மை என்பது என்ன என்பதை உணர வழி வகுக்கின்றாள் என்பதை புரிந்து கொண்டு அவளை ஆராதிக்கத் துவங்குவார்கள். அவளிடம் சரண் அடைவார்கள். இப்படியாக மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தன்னிடம் சரண் அடைந்தவர்களை திருத்தி, அப்படி திருந்தியவர்களை மன அமைதியும் லஷ்மி கடாட்சமும் பெற தன்னுடைய சகோதரியான லஷ்மியிடம் அனுப்புகின்றாள்.

தீமைகளை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பவர்களிடம் இருந்து மூதேவி எனும் ஜேஷ்ட தேவி விலகிச் செல்ல மாட்டாள். அவர்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு அவர்கள் தாம் செய்யும் தவறுகளை புரிந்து கொண்டு நல்வழியில் செல்லும் அளவிற்கான மனமாற்றம் பெறும்வரை அவர்களுக்கு ஓயாமல் தொல்லைகளையும் கஷ்டங்களையும் தந்து கொண்டே இருப்பாள். ஆகவே மூதேவி எனும் ஜேஷ்ட தேவி எதற்காக படைக்கப்பட்டாள் என்பதைக் குறித்து மனக் குழப்பம் கொள்வது தேவை இல்லாதது'.

காஷ்மீர் தூம்ர தேவி ஆலய புராணக் கதையின்படி பரப்பிரும்மன் மூன்று தேவிகளைப் படைத்தவுடன் அமிர்தத்தை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அதிலிருந்து அனைத்து தேவிகளின் சக்தியையும் உள்ளடக்கி புகை மண்டலம் போலக் காட்சி தந்த நுரையில் இருந்து பயங்கரமாக தோற்றம் கொண்ட ஒரு பெண் முதலில் வெளிவர சிவபெருமானால் அவள் பரிவார தேவதையாக ஏற்றுக் கொள்ளப்பட்டாள். காளியைப் போலக் காட்சி தந்து கரிய நிறத்தில் வெளி வந்ததினால் அவளை தூம்ர காளி என அழைத்தார்கள் (காளி என்றால் கறுப்பி மற்றும் தூம் என்றால் புகை மண்டலம் என்றும் பொருள் ஆகும்). அதுவே பின்னர் தூம்ர காளி என உருமாறியது. அவள் புகை மண்டலத்தில் இருந்து வெளி வந்து அந்த புகை மண்டலத்தையே தன்னுள் இழுத்துக் கொள்ள புகை மண்டலம் அப்படியே மறைந்து போய் நீல வானமும், பனி போன்ற வெண்மையான கடலும் தெளிவாகத் தெரிந்தது.

அப்போது அவள் அவதாரம் குறித்துக் கூறிய விஷ்ணு பகவான் 'அனைவருக்கும் முன்னால் இந்தக் கடலுக்குள் இருந்த அமிர்தத்தில் இருந்து புகை மண்டலத்தில் இருந்து வெளி வந்துள்ள இவளை தூம்ர காளி என அழைப்பார்கள். இவளுக்கு அழிவில்லை. முதலில் புகை மண்டலமாக எதுவுமே கண்களுக்கு தெரியாமல் இருந்த நிலை மறைந்து இவள் வெளி வந்ததும் நிர்மலமாக அந்த இடம் காட்சி தந்தது என்பதின் மூலம் இவள் இருட்டை விளக்கி வெளிச்சத்தைத் தர வந்துள்ளவள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்'. விஷ்ணு பகவான் தூம்ர காளியை அழிவற்றவள் என்று கூறியதின் அர்த்தம் என்ன எனில் அந்த மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வேறு யாரும் அல்ல, ஆதியும், அந்தமும் இல்லாத ஆதி பராசக்தியின் அவதாரமே என அனைவரும் உணர்ந்தார்கள் .

வடநாட்டில் பல இடங்களில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிதான் அலக்ஷ்மியும் என்று கூறி அவளை வணங்குவார்கள். அங்கு சில இடங்களில் நிலவும் புராணக் கதைகளில் அலக்ஷ்மி பார்வதிக்கு காவல் தேவதை என்று கூறப்பட்டு உள்ளது. சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ள திருவானைக்கோவில் ஆலயத்தில் ஜேஷ்ட தேவிக்கு தனி சன்னதி உள்ளது. அந்த காலத்தில் திருவானைக் கோவில் என்பது ஜம்பக மரங்கள் சூழ்ந்த வனப்பிரதேசமாக இருந்தது. அங்குதான் பார்வதியும் அப்போது தவத்தில் அமர்ந்து இருந்தாள். அவள் தவம் இருந்த இடத்தின் அருகிலேயே மூதேவி எனும் ஜேஷ்ட தேவியும் அவளுக்குக் காவலாக இருந்தாளாம். இதனால் பார்வதிக்கு காவல் தேவி எனக் கருதப்பட்ட அலஷ்மி மற்றும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி இருவரும் இரு பெயர்களில் அழைக்கப்படும் ஒருவரே ஆகும்.
ராவணன்  மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் 
முன் நின்று சக்தியை இழந்தான்

மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சக்தியை எடுத்துக் காட்டும் வகையில் ஒரு கதை உள்ளது. இலங்கையை ஆண்டு வந்த ராவணன் ஒருமுறை தேவர்களுடன் நடைபெற்ற யுத்தத்தில் அவர்களை தோற்கடித்ததும் அல்லாமல் நவக்கிரகங்களையும் அவர்கள் வசித்து வந்திருந்த இடங்களில் இருந்து விரட்டி அடித்திருந்தான். மேலும் அந்த நவக்கிரகங்களை அவமானப்படுத்தும் விதமாக அவர்களது சக்திகளை தான் சிம்மாசனத்தில் ஏறிச் செல்லும் படிக்கட்டுக்களில் அடக்கி வைத்து தினமும் அந்த படிக்கட்டுக்களின் மீது ஏறி நடந்தே தனது சிம்மாசனத்தில் அமர்வானாம். அதனால் அந்த அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் வேதனை அடைந்த நவகிரகங்கள் நாரத முனிவரை அணுகி தங்களுக்கு ஏற்பட்டுள்ள அவமானத்திற்கு விமோசனம் கிடைக்க ஒரு வழி கூறுமாறு வேண்டினார். நாரதரும் அதற்கான ஒரே வழி அப்போது பூலோகத்தில் சிவபெருமானை வேண்டிக் கொண்டு பார்வதி தவம் இருந்த திருவானைக்காவல் ஆலய இடத்தில் அவளுக்கு காவலில் உள்ள ஜேஷ்ட தேவியை வணங்கித் துதிப்பதுதான் என்றும், அவள் எதிரில் ராவணன் சென்று விட்டால் அவனுக்கு தரித்திர தோஷத்தை தந்து அவன் சிவபெருமான் மூலம் பெற்று இருந்த அபார சக்தியை அவள் அழித்து விடுவாள் என்றும் அவளால் மட்டுமே அந்த நேரத்தில் தேவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறினார்.

நாரதர் கூறிய உபாயத்தின்படி தேவர்கள் ஒரு நாடகத்தை நடத்தினார்கள். அதன்படி சனி பகவான் ராவணனிடம் சென்று அவனை கேலி செய்யத் துவங்க கோபமுற்ற ராவணன் சனி பகவானை விரட்டிக் கொண்டு அவரை பிடிக்க ஓடிவந்தான். சனீஸ்வரரும் வேண்டும் என்றே அவன் கவனத்தைத் திருப்ப அங்கும் இங்கும் ஓடியவாறு முடிவாக திருவானைக்காவலில் இருந்த ஜேஷ்ட தேவியிடம் சென்று அவளிடம் சரண் அடைந்தார். ராவணனுக்கு தேவர்கள் ஆடிய நாடகம் தெரியாது. அங்குதான் பார்வதியும் அப்போது தவத்தில் அமர்ந்து இருந்தாள். ராவணனுக்கு மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அங்கு இருந்ததும் தெரியாது. ஆகவே அதை அறியாமல் சனி பகவானை துரத்தி வந்த ராவணன் சக்தி மிக்க ஜேஷ்ட தேவி முன்னால் சென்று நின்றதும் அடுத்தகணம் அவளைக் கண்டு பயந்து நடுங்கி நின்றான். அவனும் பெரும் பண்டிதன் என்பதினால் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி பார்வதியின் ஒரு தேவ கணமாகவே என்பதை அறிந்திருந்ததினால் திரும்ப ஓடிப்போக முயன்றான். ஆனால் பார்வதி தவம் இருந்த இடத்தில் அத்து மீறி நுழைந்தவன் மீது கோபம் கொண்ட மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அவனை முறைத்துப் பார்க்க அவன் மூதேவி தொல்லையில் அகப்பட்டுக் கொண்டு தனது அத்தனை சக்தியையும் இழந்து நின்றான். அனைத்து சக்தியையும் இழந்து நின்றவனை தாக்க அதுவே தக்க தருமணம் என்பதை உணர்ந்த சனிபகவானும் அவனை ஏழரை நாட்டு சனி தோஷத்தில் சிக்க வைத்தார். அதுவே ராவணனின் அழிவுக்கு துவக்கம் ஆகி அவன் ராமபிரான் மூலம் மரணம் அடைய வழி வகுத்தது.

மூதேவி எனும் ஜேஷ்ட தேவி என்றால் தரித்திரம் என்று தவறாக கருதப்படுகிறாளே அவளுக்கா இத்தனைப் பெருமை என வியக்க வேண்டாம். அவள் பார்வதியின் துணை அவதாரம் என்பதினால் அகிலாண்டேஸ்வரி எனும் பெயரில் திருவானைக்காவலில் உள்ள பார்வதிக்கு காவலாக அங்கு தேவகணமாக மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அமர்ந்துள்ளார் என்பதில் இருந்தே அவளுடைய முக்கியத்துவம் என்ன என்பதும், அவளை ஆராதிப்பவர்களது தீமைகளை அழிக்க பரமாத்மனால் படைக்கப்பட்டவள் அவள் என்பது தெரியும். இதை வெளிப்படுத்தவே ராவணனுக்கு துரதிஷ்டத்தை தந்து அவனது அழிவிற்கு வித்திட்டது மூலம் கடவுளை நிந்திப்பவர்களை தரித்திரம் பிடிக்க வைத்து அவள் அழிப்பாள் என்பதை பரமாத்மன் ஆடிய நாடகம் வெளிப்படுத்துகிறது.

இன்னொரு கிராமியக் கதையின்படி மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை தாந்த்ரீக சாதனைகளை செய்பவர்கள் சாதனாவின் முக்கியமான தேவியாக கருதுகிறார்கள். தந்திர சாதனாவின் பல கிளைகளில் ஆத்ம விவேகம் அடைவதும் ஒன்றாகும். அதற்கான மூல சக்தியை தருபவள் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி என்பதாக தந்திர சாதனாக்களை செய்பவர்கள் கருதுவார்கள்.

தச வித்தியா தாந்தரீக வழிபாட்டில் சாதனாக்களை செய்பவர்கள் தூம்ர தேவி எனும் பெண் தெய்வத்தை ஆராதனை செய்தே சாதனாவை செய்வார்கள். தூம்ர தேவியின் வாகனம் வராஹி என்பதாகும். அதைப் போலவே மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வாகனத்தில் வராஹி உள்ளது என்பதினால் தூம்ர தேவியும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியும் ஒருவரே என்பதும் ஒருவளே இரு உருவங்களில் காட்சி தருவதாக பண்டிதர்கள் கூறுவார்கள்.

இன்னும் சில இடங்களில் தாந்தரீக சாதனாக்களை செய்பவர்கள் அலஷ்மி எனும் தேவி ஒருவருடைய துன்பங்களையும், துரதிஷ்டம் மற்றும் தரித்திரங்களை களைகிறாள் என்பதாகவும் அவளே வாழ்க்கையில் வளம் பெறவும், பேரானந்தம் பெறவும் வழி வகுக்கின்றாள் என்பதாகவும் கருதி அவளை ஆராதனை செய்து வழிபடுகிறார்கள். ஆனால் உண்மை என்ன என்றால் அலஷ்மி, தூம்ர காளி மற்றும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி ஆகிய மூன்று உருவங்களிலும் ஆராதிக்கப்படும் தேவி மூதேவி எனும் ஜேஷ்ட தேவியே ஆகும்.

சோழ மன்னர்கள் காலத்தில் ஏழரை நாட்டுச் சனியினால் பீடிக்கப்பட்டவர்கள் திருவானைக்காவலில் உள்ள கோவிலில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியுடன் சேர்த்து அங்கு இன்னொரு சன்னதியில் எழுந்தருளி உள்ள சனீஸ்வர பகவானுக்கும் அபிஷேகம் செய்து ஆராதித்தப் பின் ஊனமுற்றோருக்கு புத்தாடைகள் வழங்கினால் சனி பகவானின் தொல்லையில் இருந்து காப்பாற்றப்படுவார்கள் என்ற பரவலான நம்பிக்கை பத்தாம் நூற்றாண்டுவரை இருந்தது.

இதனால்தான் அந்த காலங்களில் மன்னர்களுக்கு ஆலோசனைகள் கூறி வந்திருந்த அரண்மனை ராஜகுருக்கள், அறுபத்தி நான்கு விதங்களிலான எந்த தரித்திரங்களும் தமது நாட்டில் தீய பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வழிபாட்டை செய்தவண்ணம் இருக்குமாறு மன்னர்களுக்கு அறிவுறுத்தி வந்தார்கள். பாண்டவ சகோதரர்களில் சகாதேவன் மட்டும் தவறாமல் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வழிபாட்டை தொடர்ந்து கடைப்பிடித்து வந்ததாகவும், அதனால்தான் ஏழரை நாட்டுச் சனியினால் பாதிக்கப்பட்ட ஐந்து சகோதரர்களில் மற்ற சகோதரர்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களைப் போல சகாதேவருக்கு எந்த துன்பமும் ஏற்படவில்லை என்பதான நம்பிக்கைக் கதை உள்ளது.

எட்டாம் நூற்றாண்டில் தென் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பல்லவ மன்னர்கள் ஆட்சியில் இருந்தபோது பல தமிழர்களின் குல தெய்வமாக மூதேவி எனும் ஜேஷ்ட தேவி இருந்துள்ளார் என்பது தெரிகிறது. ஏன் நந்திவர்ம பல்லவ மன்னர் குடும்பத்திற்கும் கூட இவளே குலதெய்வமாக இருந்துள்ளாள். பல்லவ மன்னன் ராஜசிம்மன் என்பவர் தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்தில் நிர்மாணித்த கயிலாசநாதர் ஆலயத்தில் அவள் சிலையை வைத்து வழிபட்டுள்ளார். அது போல ஏழாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வல்லம் என்ற ஊரில் மகேந்திர வர்ம பல்லவ மன்னன் கட்டியுள்ள குடைவரைக் கோவிலிலும் மிகப் பெரிய மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சிலை உள்ளது. அதன் பின் ஆட்சிக்கு வந்த சோழ மன்னர்கள் காலத்திலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு சிறப்பான வழிபாடுகள் இருந்துள்ளன என்பது அவர்கள் நிர்மாணம் செய்த பல ஆலயங்களில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டுள்ளதில் இருந்து தெரிய வரும். இந்த இரு பிரிவு மன்னர்கள் காலத்தைத் தவிர சமண மதம் மேலோங்கி இருந்த காலத்திலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியானவள் சமணர்களால் வணங்கப்பட்டு வந்துள்ளாள் என்பதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். காஞ்சீபுரத்தில் உள்ள பிரும்மபுரீஸ்வரர் ஆலயத்திலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை வினாயகப் பெருமானுடன் சேர்த்து வணங்கி வந்துள்ளார்கள்.

பல சிவன் ஆலயங்களிலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை பரிவார தேவதையாக அமைத்து இருந்ததாகவும் அவளது சன்னதியை அல்லது சிலையை எங்கு, எந்த திசையில் அமைக்க வேண்டும் என சிற்ப சாஸ்திர நூல்களில் கூறப்பட்டு இருந்ததாகவும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வழிபாடு என்பது பத்தாம் அல்லது பதினோராம் நூற்றாண்டு வரை தமிழ்நாடெங்கும் பரவலாக இருந்துள்ளது எனவும் பல ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வழிபாடு மெல்ல மெல்ல பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே குறைய ஆரம்பித்து உள்ளது.

எந்த ஒரு கடவுளையும் ஓவியமாகவோ இல்லை சித்திரமாகவோ தீட்ட வேண்டும் என்றால் அதற்கு சில விதி முறைகள் உள்ளன, அந்த உருவங்கள் இப்படித்தான் அமைந்து இருக்க வேண்டும் என்பதாக விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியான விஷ்ணுதர்மோத்தரா என்ற நூலில் கூறப்பட்டு உள்ளது. அதில் மார்கேண்டேய முனிவர் தன்னிடம் சந்தேகங்களைக் கேட்ட வாஜ்ரா என்ற முனிவருக்கு கடவுட்களின் உருவம் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதை விளக்கிக் கூறிய விவரங்கள் உள்ளனவாம். மார்கண்டேய முனிவர் அனைத்து கடவுட்களின் பல்வேறு ரூபங்களையும் நேரடியாக பார்த்து உள்ளவர் என்பதினால் கடவுளின் ரூபங்கள் எப்படி அமைந்து இருக்க வேண்டும் என்பதை அவரால் எடுத்துக் கூற முடிந்தது. ஆகவே அவர் வாஜ்ரா எனும் மன்னனுக்கு விளக்கிய தோற்றத்தில்தான் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியும் இருந்திருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் கருத்தாகும்.

மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தரித்திரம் மற்றும் துரதிஷ்டம் போன்றவற்றுடன் சம்மந்தப்படுத்தப்பட்டு கூறப்பட்டாலும் சாதனாக்களை செய்பவர்களால் ஆராதிக்கப்படும் பெண் தெய்வங்களில் அவள் முக்கியமானவள். மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் தோற்றமும் அம்சங்களும் முக்கியமான சில தத்துவங்களை எடுத்துக் காட்டுகின்றன.

லிங்க புராணக் கதையின்படி அமிர்தம் எடுக்க தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்தபோது முதலில் வெளிவந்த தேவியின் உருவம் அமங்கலமாக இருந்தது. அப்போது முதலில் வெளிவந்த அவளை யார் மணப்பது என்ற கேள்வி எழுந்தபோது துச்சாஹா என்ற முனிவர் அவளை மணக்க வேண்டும் என்பது முடிவாயிற்று. அமிர்த கலசத்தில் இருந்து முதலில் வெளிவந்த அந்த பெண் தெய்வத்தைக் குறித்து விஷ்ணு அனைவருக்கும் விளக்குகையில் அந்த அமங்கலமான பெண் லஷ்மியின் சகோதரியே என்றும், சில காரணங்களுக்காக தான்தான் அவளை படைத்து உள்ளதாக கூறினார். ஆகவே முதலில் வெளிவந்த தேவியை விஷ்ணு மணக்கவில்லை. ஆனால் அவரே அவளது திருமணம் நிகழ ஏற்பாடு செய்தப் பின் அவளுடைய இளைய சகோதரியான லஷ்மி தேவியை தானே மணம் புரிந்து கொண்டார்.

அனைவரும் முடிவு செய்தபடி துச்சாஹா முனிவர் அவளை மணந்து கொண்டாலும் வெகு விரைவிலேயே அவளால் வேத மந்திர ஒலிகளையும், நல்லவற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதைக் கண்டவர் விஷ்ணுவிடம் சென்று அவளைப் பற்றி முறையிட்டார். ஆனால் விஷ்ணு அவள் அமங்கலமான இடங்களில் வசிக்கவே அவதரிக்கப்பட்டதினால் அவள் இருக்கும் இடங்கள் அதற்கு ஏற்ற முறையில் அமைந்து இருக்கும் என்றும் ஆகவே அவளுடன் ஒத்துப் போகுமாறு அறிவுறுத்தினார். அதைக் கேட்ட அந்த முனிவரோ அதை ஏற்க முடியாமல் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை விட்டு விலகினார். இன்னொரு கதையின்படி அவளை மணக்க இருந்தவரின் பெயர் பிரபவன் என்று கூறப்படுகிறது. அதனால் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியும் ஆசாரமில்லாத வேதியரின் நிழல், உண்ட எச்சில் இலை போடப்படும் இடங்கள், சாக்கடைப் போன்ற இடங்களில் இடங்களில் வாழும் மனிதர்களுடனும், மயிர் குப்பை, கழுதை, நாய்கள் சண்டையிடும் இடங்கள், மிருகங்களின் கழிவுகள் போன்ற இடங்களில் சென்று வசிக்க முடிவு செய்தாள். இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது என்ன எனில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வசிக்க எண்ணியதாக கூறப்படும் அசுத்தமான இடங்கள் என்பது அசுத்தம் நிறைந்த பூமியின் இடங்கள் அல்ல, மாறாக மனதிலும் உள்ளத்திலும் தூய்மை இல்லாமல், தீய எண்ணங்களுடன் வாழும் மனிதர்களின் அசுத்தமான இதயம் மற்றும் மனத்தைக் குறிப்பதாகும்.

மூதேவி எனும் ஜேஷ்ட தேவி குடியிருக்கும் இடங்கள் அசுத்தங்கள் உள்ள இடங்கள் என்பதினால் அவள் வணங்கத்தகாதவள் ஆகிவிட மாட்டாள். அவளே தரித்திரம், ஏழ்மை, மற்றும் பல்வேறு துன்பங்களை தருபவள் எனத் வெளிப்படையாகத் தோன்றினாலும் அசுத்தம் என்பதும் சுத்தம் என்பதும் ஒருவரின் மனதிலும் இதயத்திலும் உள்ள நன்மை மற்றும் தீமைகளைக் குறிப்பன. ஆகவே எவர் ஒருவரின் மனதிலும், இதயத்திலும் அசுத்தம் என்கின்ற தீமைகள் உள்ளனவோ அங்கெல்லாம் மூதேவி சென்று அமர்ந்து கொண்டு அவர்களுடன் இருந்தவண்ணம் தீய எண்ணங்களை அழித்து அந்த இடத்தில் தூய்மை எனப்படும் தெய்வீகத்தை கொண்டு வருபவள் என்பது தத்துவார்த்தமாக இங்கு காட்டப்பட்டு உள்ளது. அதாவது மனித குலத்தில் உலவும் மாயை எனும் தீய எண்ணங்களையும், தீய செயல்களையும் அழித்து புண்ணிய பலாபலன்களை கொடுத்து முடிவாக தெய்வீகத்தை சென்றடைய அவளே பாதை அமைத்துத் தருகின்றாள்.

மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அருவருப்பான தோற்றத்தில் அழுக்கடைந்த துணிகளை உடுத்தியபடியும், சீவப்படாமல் பறந்தபடி உள்ள தலை முடியுடனும், கையில் ஒரு துடப்பம் ஏந்தியபடியும் இருக்க அவள் அமர்ந்துள்ள தேர் மீது பறக்கும் கொடியில் காகத்தின் உருவம் காணப்படுகிறது. இன்னும் சில ஓவியங்களில் அவள் அமர்ந்துள்ள தேரினை இரண்டு காகங்கள் இழுப்பது போல காட்சி உள்ளது. தச வித்தியா எனும் ஆராதனையில் சாதனாக்களினால் ஆராதிக்கப்படும் தூம தேவி என்பவளும் அதே உருவில் காட்சி தருகின்றாள். பண்டிதர்களின் கருத்தின்படி தூம தேவி மற்றும் மூதேவி எனப்படும் ஜேஷ்ட தேவி ஆகிய இருவரும் இரண்டு பெயர்களில் உள்ள ஒரே தேவியேதான் என்பதாகும் (பல்வேறு இடங்களிலும் ஆராதிக்கப்படும் தூம தேவி, தூம்ர காளி, அலஷ்மி போன்ற அனைவருமே மூதேவி எனப்படும் ஜேஷ்ட தேவியே ஆகும்). இன்னும் சில ஓவியங்களில் மூதேவி எனப்படும் ஜேஷ்ட தேவி ஒரு கழுதை மீது அமர்ந்துள்ள நிலையில் காணப்படுகிறாள். அவள் கையிலும் துடைப்பம் ஒன்று இருக்க அவள் தேரின் மீது உள்ள கொடியில் காகத்தின் உருவம் காணப்படுகிறது. இன்னும் சிலவற்றில் அவளை சுற்றி கொடிய விஷம் கொண்ட பாம்புகளும் காணப்படுகின்றன. இப்படியாக அவளை சுற்றி காணப்படும் சின்னங்களின் தத்துவம் என்ன?

மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அறுபத்தி நான்கு தரித்திரங்கள் உள்ள இடங்களில் இருந்தவாறு அந்த தரித்திரங்களையும் அறியாமையையும் விலக்கி அந்த இடத்தை தூய்மைப்படுத்துகிறாள் என்பதற்காக படைக்கப்பட்டு உள்ளாள். இந்த தத்துவத்தின் அர்த்தம் என்ன என்றால் மனிதர்களின் எதிர்மறை எண்ணங்களை விலக்கி, அவர்கள் தூய்மையான எண்ணங்களுடன் இருக்க வேண்டும் என்ற மாற்றத்தை தரும் வகையில் அவர்களுடைய மனதிலும் இதயத்திலும் இருந்து கொண்டு அவர்களது அறியாமையை விலக்கி நல்வழிப்படுத்துகின்றாள் என்பதாகும் .

மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வாகனமான கழுதை எதைக் வெளிப்படுத்துகிறது? துணியை துவைக்கும் வண்ணான் அழுக்கு மூட்டைகளை பொதி சுமக்கும் கழுதைகள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு நதிக்கரையில் சென்று அவற்றை சுத்தம் செய்து துவைத்தப் பின், அந்த துணிகளை மீண்டும் அதை அதன் மீதே ஏற்றிக் கொண்டு திரும்பி வருவார்கள். அந்த காலங்களில் 'பொதி சுமக்கும் கழுதைப் போல' என்ற வார்த்தை ஜாலம் உண்டு. அந்தக் கழுதைப் போலத்தான் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தன்னை வணங்கித் துதிக்கும் பாவாத்மாக்ககளின் பாவமூட்டைகளை தன் மீதே சுமந்து கொண்டு அவர்களுடைய மன அழுக்குக்களை விலக்கி நல்ல வழிக்கு அழைத்துச் செல்கிறாள். அவளை சுற்றிக் காணப்படும் கொடிய விஷப் பாம்புகள் நல்ல வாழ்க்கைக்கு செல்ல வழிகேட்டு அவளிடம் தஞ்சம் அடைந்து உள்ள தீய எண்ணம் கொண்ட மனிதர்களைக் காட்டுகின்றது.

மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் கையில் முறமும், துடப்பமும் உள்ளது. அந்த முறத்தில் சில தானியங்களும் காணப்படுகின்றன. சில சிற்பங்களில் அவள் முறத்தில் இருந்து தானியங்களைக் கொட்டுவதைப் போல காட்சி தருகிறாள். அந்த தானியங்களை நெல் விதை என்பார்கள். பக்குவமான நெல்லில் இருந்து வெளிப்படும் அரிசியை முறத்தில் கொட்டி அதை தூக்கிப் போட்டு காற்றில் புடைக்கையில் அரிசியுடன் உள்ள உமி, மண், தவிடு மற்றும் சிறு கல் போன்றவை காற்றில் பறந்து கீழே விழுந்து விடும். உண்பதற்கான நல்ல அரிசி தானியங்கள் முறத்தில் தங்கிவிடும். பக்குவப்படாத நெல்லை தூக்கி எறிந்து விடுவார்கள். அவற்றை அடுப்பில் இருந்து எழும் நெருப்பில் போட்டு தணலாக மாற்றி அதைக் கொண்டே அரிசியை சமைத்து உண்பார்கள் (முன் காலங்களில் காஸ் அடுப்புக்களோ, இல்லை மின்சார அடுப்புக்களோ கிடையாது. அப்போதெல்லாம் வயல்வெளியிலும் வீட்டின் உள்ளேயும் பூமியை தோண்டி சிறு குழி உண்டாக்கி அதில் விறகுகளையும், அடுப்புக் கரியையும் போட்டு தீ மூட்டி அதனால் கிடைக்கும் தணலை கொண்டே சமைப்பார்கள். அதன் பின் பல காலம் பொறுத்தே மண்ணினால் ஆன சமையல் அடுப்புக்கள் வந்தன).

இரண்டாவதாக அந்த முறத்தில் ஏன் அரிசி தானியம் காணப்படுகிறது ? அரிசி தானியம் தெய்வீகத் தன்மை பெற்றது என்பதினால்தான் வீட்டில் நடைபெறும் ஹோம குண்டம் மற்றும் யாக குண்டங்களில் அரிசியை நெய்யுடன் கலந்து உணவாகப் போடுவார்கள். மரணம் அடைந்தவர்களுடைய வாயில் கூட ஒரு பிடி வாய்க்கரிசி போடுவது அரிசியின் முக்கியத்துவத்தைக் காட்டும். தென் நாடாக இருந்தாலும் சரி, வட நாடாக இருந்தாலும் சரி, எங்கு மரணம் நிகழ்ந்தாலும் அங்கெல்லாம் மரணம் அடைந்தவர் வாயிலே கடைசியாக உணவினர் போடுவது அரிசி தானியமே அல்லாது பருப்புக்களோ, கோதுமையோ அல்லது பிற தானியமோ இல்லை. வேறு எந்த தானியத்துக்கும் அப்படிப்பட்ட தெய்வீக நிலை இல்லை என்பதினால் யமபெருமானே வணங்கித் துதிக்கும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் கையில் உள்ள முறத்தில் அரிசி இருப்பது ஆச்சர்யம் அல்ல.
மூதேவி எனப்படும் ஜேஷ்ட தேவி 
மற்றும் அரிசி தேவியான தேவிஸ்ரீ 

நெல் விதைகள் உள்ளே காணப்படும் அரிசி ஒவ்வொருவருடைய ஆத்மாவைப் போல உள்ளது. பெண்ணின் கர்பப்பையைப் போன்றது நெல். அதற்குள் உள்ள அரிசி தானியம் மெல்ல மெல்ல வளர்ந்து நன்கு முற்றியதும் அதை சாகுபடி செய்து அரிசியை பிரித்து எடுப்பார்கள். ஆகவே நெல் விதையை பெண் இனமாக கருதி அதை அரிசி தெய்வத்துடன் சம்மந்தப்படுத்தி போற்றுகிறார்கள். அரிசி தானியத்துக்கு இத்தனை மகத்துவம் ஏன் தரப்படுகிறது? அரிசியை பெண் இனம் என்பதின் காரணம் இந்த உலகிலேயே அரிசியின் தோற்றமே தேவிஸ்ரீ எனும் ஒரு பெண் தேவதை ஒன்றுடன் சம்மந்தப்பட்டதாகும். காம்போடியா, வியட்நாம், இந்தோனேசியா, தாய்லாந்து, கிரேக்க தேசம் என உலகின் பல்வேறு நாடுகளிலும் அரிசி தேவதை என்பவள் போற்றி வணங்கப்படுகிறாள். அங்கெல்லாம் அரிசி தெய்வத்தை 'தேவி ஸ்ரீ' (Dewi Shree) என்கிறார்கள். நெல்லின் உள்ளே இருந்து முற்றிய அரிசி தானியம் வெளிவரத் துவங்கும் காலத்தை தானியத்தின் செடி கர்பமுற்றுள்ள காலம் எனக் கருதுகிறார்கள். ஆகவே செடிகளிலும் உயிர் உள்ளது என்ற தத்துவத்தை நம்புகிறார்கள். உயிருள்ள அனைத்திலுமே ஆத்மா எனும் ஜீவன் உள்ளது, ஒரு மரணம் நிகழும்போது அதற்குள் உள்ள ஜீவன் பறந்துவிடும். அது திரும்ப வருவது இல்லை. அது போலவே ஒருமுறை நெல்லில் இருந்து அரிசியை வெளியில் எடுத்து விட்டால் அந்த நெல் உபயோகம் இல்லாமல் ஆகிவிடுகின்றது. ஆத்மாவும் உடலும் போன்ற நிலை அது. மூதேவி எனும் ஜேஷ்ட தேவியானவள் அவளை ஆராதிப்பவர்களது இதயத்தில் அமர்ந்து கொண்டு அங்குள்ள தீய எண்ணங்கள் எனும் தீமைகளை அகற்றி, இதயத்துக்குள் இயற்கையாக மெல்ல மெல்ல துளிர் விட்டபடி இருக்கும் தெய்வீகம் எனும் நல்லவற்றை இன்னும் பக்குவப் படுத்துகிறாள் என்பது அது காட்டும் தத்துவம். அரிசி உணவை உண்பது தென் இந்தியா மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் (ஒரிஸ்ஸா, வங்காளம், மத்தியப் பிரதேசம், திரிபுரா போன்ற பல இடங்கள்) அதிகம் உண்டு. அதனால்தானோ என்னவோ எதேச்சையாக மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வழிபாடு இந்த பகுதிகளில் அதிகம் உள்ளது.

முறம் எனும் சின்னம் எதைக் காட்டுகிறது? அனைத்து நெல் தானியங்களையும் முறத்தில் போட்டு புடைத்து உமி, மண், தவிடு, கல் போன்றவற்றை விலக்கி எடுத்துவிட்டு நல்ல தானியங்களை பிரித்து எடுப்பார்கள். ஆகவே மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் கையில் உள்ள முறம் என்பது காட்டும் தத்துவம் என்ன என்றால் அரிசியை முறத்தில் போட்டு நல்ல தானியங்களை பிரித்து எடுப்பது போல அந்த தேவியிடம் சென்று சரண் அடையும் ஆத்மாக்களில் உள்ள தீய எண்ணங்களையும், தீமைகளையும் அகற்றி அவை நல்ல வழியில் நடக்க வழி வகுக்கிறாள்.

அரிசி நெல்லை முறத்தில் போட்டு புடைத்து நல்ல அரிசியை பிரித்தெடுக்கும் முன்னால் அந்த நெல்லை உரலில் போட்டு நன்றாக இடித்து அதற்குப் பிறகே அதை புடைப்பார்கள். முறத்தில் போட்டு புடைக்கும்போது காற்றில் அதனுடன் கிடக்கும் தூசிகள் அனைத்தும் பறந்து போய் கீழே விழுந்து விடும். இதே போலத்தான் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தீய எண்ணங்கள் கொண்டவர்களையும், தீமைகளை செய்பவர்களையும் பிடித்து வைத்துக் கொண்டு அவர்களுக்கு ஏராளமான சோதனைகளையும், துன்பங்களையும் தந்து அவர்கள் தாம் செய்யும் தவறுகளை உணரச் செய்கின்றாள். துன்பத்தையும், துயரத்தையும் தாங்க முடியாமல் போகும்போது அவர்கள் தமது தவறுகளை உணரத் துவங்கி, கடவுளிடம் சரண் அடைகின்றார்கள். அந்த நிலைக்கு சென்று திருந்தத் துவங்கும்போது அவள் அவர்களை தன் பிடியில் இருந்து விடுதலை செய்கின்றாள்.

துணி துவைக்கும் வண்ணார்கள் துணியை கல் மீது அடித்து, கசக்கித் துவைத்து சுத்தம் செய்வதைப் போலவே அவர்களுக்கு கஷ்ட நஷ்டங்களையும், தீராத துன்பங்களையும் தந்து கஷ்ட நஷ்டங்களை சுமந்து கொண்டு செல்லும் வாழ்கை எப்படிப்பட்ட நரக வாழ்க்கை எனும் வலியை அவர்களுக்கு தரும் என்பதை உணர வைக்கிறாள். அப்போது அவர்களுக்கு பூரணமான தெய்வ நம்பிக்கை ஏற்படத் துவங்க தெய்வங்களை வழிபடத் துவங்குகிறார்கள். அந்த நேரத்தில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அவர்களுடைய தரித்திர வாழ்க்கையில் இருந்து அவர்களை விடுதலை செய்கின்றாள். இப்படியான வழியில் தெய்வீகத்தை ஒருவர் வாழ்க்கையில் உணர வைக்கவே மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அவதரிக்கப்பட்டு இருக்கின்றாள். என்ன ஆனாலும் சரி தாம் திருந்தவே மாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டு தீமைகளை செய்தவண்ணம் இருப்பவர்கள் இன்னும் அதிக தரித்திர நிலையையும், துன்பங்களையும் அடைகின்றார்கள். பிறக்கும் எவருமே தவறுகள் செய்பவர்கள் அல்ல. சந்தர்ப்பமும் சூழ்நிலையும்தான் ஒருவரை நல்லவனாகவும், கெட்டவர்களாகவும் ஆக்குகின்றன. இப்படியாக முறத்தைக் கையில் உள்ள வேறு எந்த தெய்வத்தையும் காணவே முடியாது.

மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தூய்மையற்ற இடங்களில் வசிக்கின்றாள் என்பது ஆன்மீக கண்ணோட்டத்தில் என்ன என்றால் அவள் அழுக்கடைந்த மனதோடு உள்ளவர்களிடம் இருந்து கொண்டு அவர்களது தீய எண்ணங்களை விலக்கி வறுமையை ஒழிக்க அவர்களை லஷ்மி தேவியிடம் அனுப்புகின்றாள் என்பதேயாகும். அதைப்போல தூய்மையான இடங்களிலேயே லஷ்மி தேவி வாசம் செய்கின்றாள் என்பது மூதேவி எனும் ஜேஷ்ட தேவி மூலம் தீய எண்ணங்கள் விலகி தூய்மையான எண்ணங்களுடன் இருக்கையில் லஷ்மி தேவி அவர்களிடம் வந்து அவர்களுக்கு அருள் புரிகின்றாள் என்பதைக் குறிக்கும் நிலை ஆகும். இப்படியாக சகோதரிகளான லஷ்மி தேவி மற்றும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி ஆகிய இருவரும் ஒரே அம்சத்தின் இருபுறங்கள் ஆவார்கள்.

ஆனால் இந்த தத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் மூதேவி எனும் வார்த்தை உபயோகமற்றவர்களை திட்டும் வார்த்தை என தவறாகக் கருதுகின்றார்கள். மூதேவி எனும் ஜேஷ்ட தேவி ஒருவருடைய தீய எண்ணங்களையும், தீய குணங்களையும் மாற்றி அமைத்து அவர்களை நல்வழிப்படுத்துபவளே என்பதை அவர்கள் புரிந்து கொள்வது இல்லை.

மூதேவி எனும் ஜேஷ்ட தேவி என்பவள் தூம தேவி என்ற அவதாரத்தில் உள்ளபோது கையில் வெட்டப்பட்ட மாட்டின் தலையை ஏந்திக் கொண்டு காகத்தின் உருவம் கொண்ட கொடியை தன் தேரில் ஏற்றி வைத்திருக்க அவளது தேரினை இரண்டு காகங்கள் இழுப்பதைப் போல தோற்றம் தருவாள். அவளுக்குப் பிடித்த வாசனை சுடுகாட்டில் இருந்து எழும் புகையின் மணம். சுடுகாட்டில் உள்ள பிணங்களைக் கூட அவள் தின்பாள் என்பதும் நம்பிக்கை. இப்படிப்பட்ட ஸ்மசான (சுடுகாடு) சின்னங்களைக் கொண்ட இந்த தேவியான மூதேவியை ஏன் தச வித்யா எனும் தாந்த்ரீக முறையில் வழிபடுகிறார்கள்? அவளுடன் காணப்படும் காகம் எதை வெளிப்படுத்துகின்றது? தூம தேவி சுடுகாட்டில் உள்ள பிணங்களைக் கூட தின்பாள் என்பது எடுத்துக் காட்டுவது என்ன என்றால் சுடுகாட்டில் எரிக்கப்படும் உடலில் இருந்து வெளியேறிய ஆத்மா அங்கு வான்வெளியில் இருக்கும்போது அந்த ஆத்மாக்களின் பாபங்களை தன்னிடம் இழுத்துக் கொண்டு விடுகின்றாள் என்பதே ஆகும்.

காக்கையை யமலோகத்தின் தூதுவராக நினைக்கிறார்கள். அதனால்தான் சிரார்த்தம் போன்ற இறந்தவர்களுக்கு செய்யும் சடங்குகளில் பிண்டதானங்கள் செய்யும் வேளையில் ' காக்கை எனும் பறவையே, இந்த பிண்டதானத்தை ஏற்றுக் கொண்டு யமபெருமானின் லோகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஆத்மாக்களின் பசியை தீர்த்து வை' என்று வேண்ட வேண்டும் என்பார்கள். அப்போது தன்னுடைய தூதுவரான காக்கை வயிறார உண்டதும் அந்த வீட்டில் உள்ளவர்களது ஆத்மா சாந்தியடைய யமராஜர் அருள் புரிகிறார் என்பது ஆன்மீக தத்துவம் ஆகும்.

அதனால்தான் தன்னை ஆராதித்தவர்கள் இறந்த பின் யம லோகம் சென்றாலும் அங்கு தன்னுடைய பக்தர்கள் யமனுடைய கொடுமையை அனுபவிக்கக் கூடாது என்பதினால் மயானத்தில் உலவும் மூதேவி எனும் ஜேஷ்டா தேவி தனது பக்தர்களின் ஆத்மாக்கள் மன பயம் இன்றி செல்ல வேண்டும் என்பதற்காக தனது தேரை இழுக்கும் காக்கையை அங்கு போடப்படும் பிண்டங்களை தின்னச் செய்து, அதன் மூலம் அந்த ஆத்மாக்களின் பசியைப் போக்கி மேலுலகத்துக்கு அனுப்புகிறாளாம். ஆகவே காக்கை மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு சேவகம் செய்யும் பறவை. அது மட்டும் அல்ல யமதர்மராஜரின் தூதுவர் மற்றும் அவருடைய சகோதரராக கருதப்படும் சனி பகவானுக்கும் காக்கையே வாகனம் என்பதினால் யமராஜர், சனி பகவான் மற்றும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு இடையே நெருங்கிய தொடர்ப்பு உள்ளது என்பதாக ஆன்மீக நம்பிக்கை உள்ளது. இதனால்தான் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை வழிபட்டால் யம கணங்கள் மூலம் கிடைக்கும் தண்டனை குறைந்து யம பயம் விலகும் என்று அந்த காலங்களில் நம்பினார்கள். தந்தரீக சாதனாக்களை செய்பவர்கள் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியே யமராஜர் மற்றும் சனிபகவானுக்கு அதிபதியாவார் என்பதாக நம்புகின்றார்கள். இதனால் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் யமராஜர், சனிபகவான் மற்றும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கும் சேவகம் செய்யும் பறவையான காக்கையை வணங்கினார்கள்.

சனி பகவானுக்கு வாகனம் காக்கைதான். அதே காக்கைதான் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் தேரை இழுக்கும் பறவையும் ஆகும். அவளது கொடியிலும் காக்கையின் உருவம் உள்ளது. இதனால்தான் இருவருக்கும் பொதுவான அம்சமாக காக்கை இருப்பதினால் சனியின் தொல்லை இன்றி இருக்க வேண்டும் எனில் ஆலயங்களில் சென்று ஜேஷ்ட தேவியை ஆராதிக்க வேண்டும் என்ற நம்பிக்கை பிறந்தது. மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு அவளது கட்டளைக்கு ஏற்ப காக்கையை வாகனமாக சனி பகவானே அனுப்பி வைத்தாராம் என்பதினால் சனிபகவான் மீது மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு அதிகாரம் உள்ளது புலப்படும். யமராஜருக்கும் காகமே தூதுவர். ஆகவே மூவரும் ஒருவருக்கொருவர் தொடர்புள்ளவர்கள், அவர்களுடைய செயல்கள் ஒருவருக்கொருவருடன் முரண்படுவதில்லை என்பது தெளிவாகும்.

இறந்தவர்களது உடல் எரிக்கப்பட்டதும் அதில் இருந்து வெளியேறும் ஆத்மா அந்த சுடுகாட்டில் எரிக்கப்பட்ட உடலின் மேற்பகுதியிலேயே சில காலம் சுற்றித் திரிந்தப் பின் மேலுலகம் செல்லும். அந்த ஆத்மாக்களை மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வானத்தில் இருந்து பார்த்துக் கொண்டு இருப்பாள். அப்போது அங்கு சுற்றித் திரியும் சில ஆத்மாக்கள் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை அடையாளம் கண்டு கொண்டு அவளிடம் அடைக்கலம் ஆகி தாம் அறியாமையில் செய்துவிட்ட பிழைகளை மன்னித்து காக்குமாறு வேண்டிக் கொள்ளும்போது கருணை கொண்டு அந்த தேவியும் அந்த ஆத்மாக்களின் தீமைகளை விலக்கிவிட்டு, ஆத்மாக்களை தூய்மைப்படுத்தி மேலுலகத்துக்கு அனுப்பும்போது அவர்களுக்கு யம கணங்கள் தொல்லைகளைத் தரமாட்டார்கள். உயிருடன் இருக்கையில் தம்மை வணங்கித் துதித்ததினால் அந்த ஆத்மாக்களை நல்ல பிறவி எடுக்கும் வகையில் அங்கிருந்து அனுப்பி வைக்கிறாள். பண்டிதர்களின் கூற்றின்படி அனைத்து ஆத்மாக்களும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அவை பூமியிலே இருந்தபோது செய்த நன்மைகளின் அளவைக் கொண்டு அவற்றால் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை அடையாளம் கண்டு கொள்ள முடியும் எனும் நிலையில் பரமாத்மன் நியதியை வைத்து உள்ளார்.

மூதேவி எனும் ஜேஷ்ட தேவி சுடுகாடுகளில் ஏன் சுற்றுகிறாள்? புராணங்கள் சுடுகாடுகளில் சுற்றுபவர் ஸ்மசானவாசி எனும் சிவபெருமான் என்பதாகக் கூறுகிறது. ஆகவே அங்கு அவருக்கு துணையாக, சேவகம் செய்ய சிவபெருமானின் துணைவியான பார்வதியின் அவதார கணங்களில் ஒன்றான மூதேவி எனும் ஜேஷ்ட தேவி அங்கு இருக்கின்றாள். அதனால்தான் அமிர்தம் கடைந்தபோது முதலில் வெளியான பார்வதியின் அவதார கணங்களில் ஒன்றான மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை விஷ்ணு பகவான் மணக்கவில்லை. அவளை சிவபெருமானே தன்னுடைய பரிவார தேவதையாக ஏற்றுக் கொண்டு தான் அமர்ந்துள்ள பல ஆலயங்களில் பார்வதிக்கு காவலாக இவளையும் நியமித்து உள்ளார். இதனால்தான் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சிலைகள் பெரும்பாலும் சிவன் மற்றும் சக்தியின் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

மூதேவி எனும் ஜேஷ்ட தேவி சில ஓவியங்களில் வெண்மை உடை அணிந்து விதவைப் போல நகைகளை அணிந்து கொண்டிராமல் காட்சி தருகின்றாள். விதவை என்பது வீட்டிலும் சரி, சுற்றத்தாருடனும் சரி உலக ஆசைகளிலும் சரி அவை அனைத்தையுமே துறந்து நிற்கும் நிலை ஆகும் (முன் காலங்களில் கணவனை இழந்து விட்டப் பெண்கள் தமது அழகை உருக்குலைத்துக் கொண்டு, யாராலும் விரும்பப்படாத தோற்றத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக தலைமுடியை முற்றிலும் வெட்டி எடுத்து விட்டு, நகைகளை அணிந்து கொண்டிராமல், எந்த விதமான விழா மற்றும் சுப காரியங்களில் கலந்து கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தார்கள். உணவில் இருந்து ஆடைகள்வரை எந்த ஆசைக்கும் அடிமையாகி தம்மை மீண்டும் இழக்கலாகாது என்பதை கட்டாயப்படுத்தவே இந்த கட்டுப்பாடுகளை வைத்து இருந்தார்கள்). ஆகவே தந்திரக் கலையில் சித்தி பெற விரும்புபவர்கள் முதலில் தம்முள் உள்ள உலகப் பற்றை அழித்துக் கொள்ளத் துவங்கிய பின்னர்தான் அவர்கள் வேண்டிய சித்தி கிடைக்கும் என்பதைக் காட்டும்வகையில் அவள் விதவைக் கோலத்தில் காட்சி தருகிறாள்.

ஒருவர் நல்ல காரியங்களுக்காக வெளியில் செல்லும்போது எதிரில் விதவை, அலங்கோலமான பிச்சைக்காரன் அல்லது அனாதைகள் போன்றவர்கள் தென்பட்டால் அதை அபசகுனமாகக் கருதி மூதேவியைப் பார்த்தாலே காரியங்கள் நடக்காது' என தவறாக எண்ணுவார்கள். இப்படி தவறாக எண்ணப்படும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி பத்தாம் நூற்றாண்டு காலம்வரை பெருமளவு ஆராதிக்கப்பட்டு வந்து இருக்கிறாள். பல இடங்களிலும் நடைபெறும் பூஜைகளில் ஆராதிக்கப்படும் மேரு யந்திரத்தில் ஒன்பது படிக்கட்டுக்கள் உண்டு. அந்த படிக்கட்டுக்களை நவாவரணம் அல்லது நவபரணம், அதாவது ஒன்பது கவசம் என்று கூறுவார்கள். சிவன் குடி இருக்கும் மேரு மலையை பிரதிபலிப்பதாக கருதப்படும் மேரு சக்கரத்தில் புவனேஸ்வரி தேவி மேல் பகுதியில் அமர்ந்து இருப்பாள். சாக்த வழிபாட்டு முறையில் செய்யப்படும் பூஜைகளில் ஆராதிக்கப்படும் அந்த மேருவின் ஒன்பது படிக்கட்டுகளையும் பார்வதி தேவியினால் உருவாக்கப்பட்ட அறுபத்தி நான்கு பயங்கரமான சக்தி வாய்ந்த யோகினிகள் காவல் காத்து நிற்பார்கள். ஒவ்வொரு யோகினியும் ஒவ்வொரு கலையில் சிறந்தவர்கள். அவர்களில் ஒருவளே மூதேவி எனும் ஜேஷ்ட தேவியும் ஆவாள். மேரு யந்திர பூஜையை ஞான மற்றும் யோக மார்க்க வழிபாட்டு முறையில் செய்வார்கள். அந்த பூஜையில் புவனேஸ்வரி தேவி அமர்ந்து இருக்கும் மேரு மலை முகட்டுக்கு தடங்கல் இல்லாமல் செல்ல அந்த காவல் யோகினிகளை முதலில் ஆராதிப்பார்கள். இத்தனை மகிமை வாய்ந்த மேருவின் வாயிலில் உள்ள மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வணங்கப்பட வேண்டிய தேவியே என்பது இதனால் புலனாகிறது அல்லவா?

சில இடங்களில் காணப்படும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சிலையின் இருபுறமும் இரு உருவங்கள் உள்ளதைக் காணலாம். அதில் ஒன்றாக மாட்டின் உருவமும், இன்னொன்றாக இளம் பெண் உருவங்களும் உள்ளன. மாட்டின் உருவத்தை நந்திதேவர் என்று நம்புகிறார்கள். இன்னும் சிலரோ அந்த மாட்டு முகத்தைக் கொண்டவரை, தமிழகப் பகுதிகளில் கிராமத்தினர் பலர் வணங்கும் (முக்கியமாக வண்ணார் எனும் இனத்தவர் வணங்கும்) மாடன் எனப்படும் மாடசாமி என்கின்றார்கள். ஏன் எனில் மாடசாமியும் சிவபெருமானால் படைக்கப்பட்டவரே என்பதும், நந்தி தேவர் சிவபெருமானின் வாகனம் என்பதும் ஐதீகமாக உள்ளது. இன்றைக்கும் கூட கிராமப்புறங்களில் சில கிராம தேவதை ஆலயங்களில் பெண் சிலைகள் சில கழுதையோடு இருப்பதைக் காணலாம். கழுதை என்பது மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வாகனம் என்பதினால் அந்த பெண் கிராம தேவதைகள் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி என்கின்றார்கள்.

இரண்டாவதாக உள்ள இளம் பெண்ணின் உருவம் வாக்கின் தேவதையான வாக் தேவதை என்று கூறுகிறார்கள். வாக்வாதினி மந்திரம் என்பது வாக்கு வலிமையைக் கொடுக்கும் மந்திரமாகும். அதைதான் காளி தேவி உஜ்ஜயினியில் காளிதாசனுக்குக் கொடுக்க அவர் நா வன்மை பெற்றார் என்பது நம்பிக்கை. அந்த வாக்கு வன்மையைத் தருபவளே மகா வித்யாவில் உள்ள ஒன்பதாவது தேவியான மாதங்கி தேவி ஆகும். மாதங்கி உபாசனை செய்வதின் மூலம் சகல கல்வி கேள்விகளிலும் தேர்ச்சியை வெகு விரைவில் அடைய முடியும். அப்படிப்பட்ட வலிமையைக் கொண்ட மாதாங்கி தேவியுடன் உள்ள மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வணங்கப்பட வேண்டியவளே என்பது இதன் மூலம் தெரியவருகிறது.

மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் இப்படிப்பட்ட தோற்றங்களின் தத்துவங்களை நன்கு அறிந்திருந்த பண்டைக் கால ரிஷி, முனிவர்கள் அவர்கள் சேவகம் செய்து வந்திருந்த ராஜா மகாராஜாக்களுக்கு அவற்றை எடுத்துரைத்திருந்ததினால்தான் அந்த மன்னர்கள் நிர்மாணித்த ஆலயங்களில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சன்னதிகளும் வைக்கப்பட்டு அவள் வழிபடப்பட்டு வந்துள்ளாள். ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் பல்லவர்கள் மற்றும் சோழ மன்னர்கள் காலத்தில் மூதேவி எனும் ஜேஷ்டாதேவியின் வழிபாடு தென் இந்தியாவில், முக்கியமாக தமிழ் நாட்டில் பெருமளவு இருந்துள்ளது என்பதற்கு ஆதாரமாக பல ஆலயங்களில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு சிலைகள் உள்ளதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை பல்வேறு பெயர்களில் ஆனால் அதே தோற்றத்தில் கிராம தேவதையாகக் கூட வழிபட்டு உள்ளார்கள்.

திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கு சிலை உள்ளதைப் போலவே திருச்சி மாவட்டத்தில் உள்ள உய்யகொண்டான் மலையில் உள்ள உஜ்ஜீவனாதர் எனும் ஆலயத்திலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் சிலை வைக்கப்பட்டு வணங்கப்பட்டு வந்துள்ளது. அந்த காலங்களில் ஒருவர் நீண்ட பயணம் மேற்கொள்ளும் முன்னர் தமது பயணத்தின் போது எந்தவித விபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை வேண்டிக் கொண்டு யாத்திரைக்கு கிளம்புவார்கள். அப்படிப்பட்ட வழிபாடு இன்றும் தொடர்கிறது. திருவானைக்காவல் ஆலயத்தில் உள்ள மூதேவி எனும் ஜேஷ்ட தேவி ஆதி பராசக்தி என வணங்கப்படுகிறாள். அவள் சிலையின் இருபுறங்களிலும் இரண்டு உருவங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதீஸ்வரர் ஆலயத்திலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியானவள் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் சன்னதிகளுக்கு இடைப் பகுதியில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு அருள் ஆசி புரிகிறாள். அவளை அனுக்கிரஹ தேவதையாக இந்த ஆலயத்தில் வழிபடுகிறார்கள். தமது வேண்டுதல்கள் நிறைவேற இந்த தேவிக்கு ஆடைகள் சாத்தி அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் சப்த கன்னிகைகள் தமது சாபத்தை விலக்கிக் கொண்ட தலமான கடம்பவனேஸ்வரர் ஆலயத்திலும் ஜேஷ்ட தேவி வழிபடப்பட்டு வந்துள்ளாள். இந்த ஆலயம் சுமார் 1000 அல்லது 2000 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம் ஆகும்.

அது போலவே 1000 அல்லது 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கருதப்படும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ ஹரி தீர்த்தேஸ்வரர் ஆலயத்திலும் சப்த மாதர்கள், அறுபத்தி மூன்று நாயன்மார்கள், ஐயனார், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சரஸ்வதி, மகாலட்சுமி, முருகன், நவகிரகங்கள், பைரவர், சூரியன், சந்திரன் போன்றவர்களுடைய சன்னதியைப் போலவே மூதேவி எனும் ஜேஷ்ட தேவிக்கும் சன்னதி உள்ளது என்பதில் இருந்து அவள் அந்த காலங்களில் வழிபடப்பட்டு வந்துள்ளது புரியும். இந்த ஆலயத்தில் காணப்படும் அவள் சிலையில் இருபுறமும் காணப்படும் இரு உருவங்கள் அவளது மகன் குளிகன் மற்றும் மகள் மாத்தி என்கிறார்கள். ஆனால் மற்ற ஆலயங்களில் அவளது சிலையின் இருபுறமும் செதுக்கப்பட்டு உள்ள இரு உருவங்களை நந்தி தேவர் என்றும், வாக் தேவதை என்றும் கூறுகிறார்கள்.

மாயவரத்தின் அருகில் உள்ள வழுவூரில் சூலை நோய்கள் (காலம் தவறி நிகழும் மாதவிடாயால் ஏற்படும் நோய் அல்லது வயிற்று வலி நோய்) குணமாக பக்தர்கள் ஆராதிக்கும் வீரட்டேஸ்வர் என்ற சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. அது பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த ஆலயம் ஆகும். அந்த ஆலயத்திலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வணங்கப்பட்டு வந்து இருக்கிறாள். வட நாட்டில் பல இடங்களிலும் சீதள தேவி என்பவளை மூதேவி எனும் ஜேஷ்ட தேவியாக வணங்கி வருகிறார்கள். அவள் அம்மை போன்ற கொடிய நோய்களை குணப்படுத்துவதாக கூறப்படுகிறது. பல்லவ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ள வீராபுரம் என்ற சிவன் கோவிலை சேர்ந்த ஒரு ஆலயக் குளம் உள்ளது. அதன் படிக்கட்டுக் கரையிலும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி வழிபடப்படுகிறாள்.

108 நாமங்களைக் கூறி லஷ்மி தேவியை ஆராதிக்கும் தோத்திரத்தில் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியும் இடம் பெற்று இருக்கிறாள். அதில் சில வரிகள் கீழே உள்ளன:

• ஓம் சௌந்தர்யா லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஸ்வர்க லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஷைன்ய லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஜய லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஜகல் லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஜோதி லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஜேஷ்ட லக்ஷ்மியே போற்றி
• ஓம் ஷட்புஜ லக்ஷ்மியே போற்றி

இப்படியாக பத்தாம் நூற்றாண்டுவரை பரவலாக பல இடங்களிலும் வழிபடப்பட்டு வந்துள்ள மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வழிபாடு பின்னர் குறையத் துவங்கி உள்ளது. விஷ்ணுவினால் படைக்கப்பட்டதாக கூறப்படும் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை விஷ்ணு ஆலயங்களில் வழிபடாமல் சிவபெருமானின் ஆலயங்களில் வழிபடுகின்றார்கள் என்பது ஆச்சர்யம் தரும் செய்தியாகும். பத்தாம் நூற்றாண்டு முதல் அவளுடைய முக்கியத்துவமும், வழிபாடும் குறைந்ததற்கான காரணங்கள் சரிவரத் தெரியவில்லை.

பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் மூதேவியின் வழிபாடு மெல்ல மெல்லக் குறையத் துவங்கியது என்பதின் காரணம் சமூகப் பிளவே. மக்கள் கடவுட்களையும் ஆரியக் கடவுள் மற்றும் திராவிடக் கடவுள் என பிரித்துப் பார்க்கத் துவங்கினார்கள். அந்த காலங்களில் ஆட்சியில் இருந்த பாண்டிய மற்றும் பெரும்பாலான சோழ மன்னர்கள் அந்தணர்கள் அல்லாதவர்களே. ஆகவே அந்த மன்னர்களினால் ஊக்குவிக்கப்பட்டு வந்திருந்த தெய்வீக வழிபாட்டு முறைகள் ஒவ்வொரு கட்டத்திலும் வறுமையில் இருந்த பெருவாரியான சமூகத்தினரால் பெரிய அளவில் ஏற்கப்பட்டு வந்துள்ளது. பெரும்பாலான இடங்கள் கிராமப்புறங்களாகவே இருந்ததினால் மன்னர்கள் நிர்மாணித்த ஆலயங்கள் கிராமங்களில் அமைக்கப்பட்டன. புராணங்களைப் படித்தோம் என்றால் கடவுட்கள் பலரும் தமது சாபங்களைக் களைந்து கொள்ள பூமிக்கு வந்தபோது அடர்ந்த காடுகளிலும் நதிக் கரையிலும் அமர்ந்து தவம் செய்துள்ளார்கள் என்பது தெரியும். அந்த இடங்கள் பெரும்பாலும் கிராமங்களிலேயே அமைந்து இருந்தன. இப்படியாக அவர்கள் அமர்ந்து இருந்த புனித இடங்களில் எழுந்த ஆலயங்கள் மிகச் சிறிய அளவில் கிராமங்களில் இருந்துள்ளது. அவற்றை வழிபாட்டுத் தலம் என்ற பெயரில் அமைத்து இருந்துள்ளார்கள். அந்த வழிபாட்டுத் தலங்கள் மரத்தடிகளில் இருந்துள்ளன. ஆற்றின் கரைகளில் இருந்துள்ளன. மேலும் அவற்றில் பலவிதமான தெய்வங்கள் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு இருந்துள்ளன. அந்த ஆலயங்களின் சிலவற்றின் சக்தியை உணர்ந்த மன்னர்கள் பின்னர் மிகப் பெரிய ஆலயக் கட்டடங்களை எழுப்பி அதில் அந்த சக்தி மிக்க தெய்வங்களின் சிலைகளை நிறுவினார்கள். கிராம தேவதை ஆலயங்களாக இருந்தவை பிற்காலத்தில் பெரிய ஆலயங்களாயின.

இரண்டாவதாக அந்த காலங்களில் அந்தணர்கள் ஆதிக்கமும் அதிகம் இருந்தது. அந்தணர்கள் வேத பாடங்களை நன்கு படித்திருந்த வல்லுனர்கள் என்பதினால் எந்த பிரிவை சேர்ந்த மன்னர்கள் என்றாலும் அவர்கள் நடத்திய பல்வேறு புனித காரியங்களுக்கும் அவர்களது உதவி தேவையாக இருந்தது. இதனால் ஆலயங்களில் பல கட்டுப்பாடுகள் தோன்றத் துவங்கின. சன்னதிகளில் அனைத்து பிரிவினரும் அனுமதிக்கப்படவில்லை. பூஜைகளில் சமஸ்க்ருத மொழியில் மந்திரங்கள் ஓதப்பட்டன. ஆனால் கிராமங்களில் வெட்ட வெளியில் அமைந்து இருந்த ஆலயங்கள் எனப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் யார் வேண்டுமானாலும் சென்று தெய்வங்களுக்கு மாலைப் போட்டோ, பூக்களைத் தூவியோ நேரடியாக வழிபட முடிந்தது. ஆனால் அங்கெல்லாம் மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்படவில்லை. சில பிரசாதங்கள் அசைவ உணவுகளாகவும் இருந்தன. கிராமங்களில் இருந்தவர்களில் பெரும்பாலோனோர் ஏழைகள். தினமும் குளித்துவிட்டு மாற்று உடை அணிய வசதி அற்றவர்கள். அவர்களும் திறந்தவெளி ஆலயத்தில் வந்து வழிபட்டார்கள். ஆகவே அப்படிப்பட்ட ஆலயங்களுக்கு செல்வதை பிராமணர்கள் தவிர்த்து வந்தார்கள்.

இதன் விளைவாக வேத வழி ஆலயங்கள் என்றும் வேத முறையில் இல்லாத ஆலயங்கள் எனவும் ஆலயங்கள் பிரித்துப் பார்க்கப்பட்டன. வேத வழியிலான ஆலயங்களில் ஆகம வழிபாட்டு முறை அமைய மற்ற ஆலயங்கள் ஆகம வழிபாட்டு முறை அற்ற ஆலயங்கலாயின. கிராமங்களில் இருந்த ஆலயங்கள் கிராம தேவதை ஆலயங்கள் என அழைக்கப்படலாயிற்று.

கிராம தேவதைகள் என்பவர்கள் இரண்டாம் நிலைக் கடவுட்கள் என்றே பெரும்பாலானவர்கள் கருதும் அளவிற்கு கருத்துக்கள் பரப்பப்பட்டன. மூல தெய்வங்களின் அதாவது முதல் நிலைக் கடவுட்கள் எனக் கருதப்பட்ட தெய்வங்களின் பரிவார தேவதைகள்தான் கிராம தெய்வங்கள் என்றும் அவர்களுக்கு தனித் தன்மையும், சக்தியும் கிடையாது எனவும் கருதப்பட்டன. முதல் நிலைக் கடவுட்கள் என்பவர்கள் சிவன், விஷ்ணு, பிரும்மா, பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி என்பவர்கள் ஆவர். கிராம தேவதைகளை இரண்டாம் அல்லது மூன்றாம் நிலைக் கடவுட்கள், அதாவது ஆலயங்களில் உள்ள தெய்வங்களுடைய படை வீரர்கள் என்று கூடக் கூறும் அளவிற்கு நிலைமை சென்றிருந்தது.

அந்தணர்களின் கடவுள் என வணங்கிய பிரிவில் வேத முறையிலான வழிபாட்டுக்குறிய தெய்வங்கள் எனக் கருதப்பட்ட சிவபெருமான், வினாயகர், விஷ்ணு, ராமர், ஹனுமான், பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி, அவர்களுடைய பல்வேறு ரூபங்களான லலிதா திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி தேவி மற்றும் பல்வேறு ரூப அம்பாள் போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் அதில் பார்வதியின் அவதாரமான மாரியம்மன் குடும்ப வகையினரான அம்மன்கள் எனப்பட்ட தெய்வங்களை சேர்த்துக் கொண்டது இல்லை. ஆரம்ப காலங்களில் பிராமணர்கள் முருகன், கிருஷ்ணர், வள்ளி மற்றும் மாரியம்மன் போன்றவர்களை ஏற்கவில்லை என்றாலும் காலப்போக்கில் அவர்களையும் வழிபடத் துவங்கினார்கள்.

அதே நேரத்தில் அந்தணர் அல்லாதோர் கிருஷ்ணர், முருகன், பரசுராமர்,காத்தவராயன், சூலி, பேயாண்டி, குதிரை வீரன் மற்றும் வள்ளி, மாரியம்மன், மகமாயி, ரேணுகா தேவி, எல்லம்மாள், காளி, யோகினிகள், மற்றும் பலவித அம்மன்கள் போன்றவர்களை வணங்கி வந்தார்கள். ஆகவே அவர்களை வணங்கிய கடவுட்களை அந்தணர்கள் தவிர்த்தே வந்திருந்தார்கள். அந்தணர்கள் வணங்கிய பெண் தெய்வங்களை அம்பாள் என்ற பெயரிலும், பிற சமூகத்தினர் வணங்கி வந்த அதே பெண் தெய்வங்களை அம்மன் என்றும் பெயரிட்டு உருவங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தி அதிலும் அபிப்பிராய பேதத்தை உருவாக்கினார்கள்.

மூதேவி எனும் ஜேஷ்ட தேவியைப் பொருத்தவரை அவள் யோனினி என்றும், தாந்த்ரீக கடவுள் எனவும் கருதப்பட்டதினால் அவளை ஆகம மற்றும் வேத வழி முறையில் இல்லாத தெய்வம் எனக் கருதி அவளை வழிபடுவதை தவிர்த்தார்கள்.

பல இடங்களிலும் ஆட்சியில் இருந்த மன்னர்கள் தம் ஆட்சி பலமாக இருக்க, எதிரிகளை அழிக்க பல்வேறு முறையிலான தாந்த்ரீக வழிபாட்டை கடைபிடிக்கத் துவங்கினார்கள். அவை தாந்த்ரீக மற்றும் மாந்த்ரீக முறைகளில் ஆன வழிபாட்டை அதிகரித்தது. அந்த மந்திர தந்திர வழிபாட்டு முறையில் லஷ்மி தேவியின் சகோதரி என்று கூறப்பட்டு வந்திருந்த மூதேவி எனும் ஜேஷ்ட தேவி முக்கியமானவளாக இருந்தாள். மூதேவி எனும் ஜேஷ்ட தேவி தென் இந்தியாவின் பல இடங்களில் மன்னர்களினால் ஊக்குவிக்கப்பட்டு பெருமளவில் ஆராதிக்கப்பட்டு வந்திருந்ததினால், வைதீக முறைகளில் இருந்த மூல தெய்வங்களின் பெருமைகள் குறையத் துவங்க அதை ஏற்க முடியாமல் அவளது வழிபாட்டின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில்அந்தணர்கள் செயல்படத் துவங்கினார்கள்.

பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பல்லவ மற்றும் சோழ மன்னர்கள் ஆட்சி காலத்திற்குப் பிறகு அந்தணர்கள் ஆதிக்கம் அதிகரிக்கத் துவங்கியது. அவர்கள் மூதேவி எனும் ஜேஷ்ட தேவியை அந்தணர்கள் அல்லாதவர்களின் கடவுளாக, மாந்த்ரீக தாந்த்ரீக மோகினியாக, தரித்திர தேவியாக, அமங்கலமான தேவியாக சித்தரித்து, அவளது அருமை மற்றும் பெருமைகளை குறைத்துக் கூறி பரவலாக வழிபடப்பட்ட மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வழிபாடு குறைய தம்மால் ஆன செயல்களை செய்யத் துவங்க மூதேவி எனும் ஜேஷ்ட தேவியின் வழிபாடு மெல்ல மெல்ல குறையத் துவங்கியது. ஆனால் மூதேவி எனும் ஜேஷ்ட தேவி மகாலஷ்மிக்கு சற்றும் குறைந்தவள் அல்ல என்பதும், அவளே லஷ்மி கடாட்ஷம் கிடைக்க காரணமாக இருக்கின்றாள் என்பதும் மறுக்க முடியாத உண்மையாக இருப்பதினால் பிற்காலத்தில் அவள் வழிபாடு பல இடங்களிலும் மீண்டும் தொடரத் துவங்கி உள்ளது.